இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, February 21, 2016

பள்ளி தேர்வுகள், தேர்தல் வருவதால்அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் 3 மாதம் ஒத்திவைப்பு: ஜாக்டோ அறிவிப்பு


ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட, 28 ஆசிரியர் சங்கங்களை ஒன்றிணைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ) உருவாக்கப்பட்டது. ஜாக்டோ சார்பில், ‘புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது.இந்தநிலையில், ஜாக்டோவின் உயர்மட்டக்குழுக் கூட்டம் திருச்சி புத்தூர் ஆல் செயின்ட்ஸ் பள்ளியில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற முன்னாள் மேலவை உறுப்பினரும், அமைப்பாளருமான முத்துசாமி, துணை அமைப்பாளர் இளங்கோ ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜாக்டோ தனது கோரிக்கைக்காக தொடர்ந்து போராடி வந்தது. ஆனால் இந்த அரசு செவிமடுக்கவில்லை. 6 கட்ட தீவிர போராட்டத்துக்கு பிறகும் முதல்வர் ஜெயலலிதாவும், நிதியமைச்சர் பன்னீர்செல்வமும் கண்டுகொள்ளாத செயல் எங்களை அவமதித்து, அவமானப்படுத்தும் செயல். இந்த அரசின் மதிக்காத செயலை கடுமையான வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். கோரிக்கைகளை வென்றெடுப்பது தான் எங்கள் ேநாக்கம், லட்சியம்.

ஆனால் மார்ச் மாதம் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதித்ேதர்வுகள், சட்டமன்ற ேதர்தல் வர உள்ளதால், ேபாராட்டத்தை 3 மாத காலத்துக்கு ஒத்தி வைக்கிறோம். இனி எந்த ேபாரட்டமும் நடத்தி பயனில்ைல. எனவே, எங்கள் 15 அம்ச ேகாரிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் ெவளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment