இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 15, 2016

பிளஸ் 2 தேர்வு பாதிக்கும் அபாயம்?மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இன்று ஸ்டிரைக்


பிளஸ் 2 தேர்வு நெருங்கும் நிலையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், இன்று முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், பொதுத் தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது; ஆனால், எந்த உறுதியும் அளிக்கவில்லை.எனவே, ஜாக்டோவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, நேற்று முதல், காலவரையற்ற போராட்டத்தை துவக்கினர். 'முதல் நாளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை' என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் பாலசந்தர் தெரிவித்தார்.

இந்நிலையில், 'முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், இன்று முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுவர்' என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் அறிவித்துள்ளார்.போராட்டம் அறிவித்துள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தான், பிளஸ் 2 பாடம் நடத்துகின்றனர்; தேர்வு கண்காணிப்பு, மேற்பார்வை, விடைத்தாள் திருத்தம் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களின் போராட்டம், செய்முறைத் தேர்வையும், பொதுத் தேர்வையும் நேரடியாக பாதிக்கும் எனகூறப்படுகிறது. 'ஹால் டிக்கெட்' இன்று முதல், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், 'மார்ச், 4 முதல் பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 22 முதல், 'ஹால் டிக்கெட்' வழங்கப்படும்' என, கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், ஏழு லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாணவர்களின் பெயர் விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டு, இறுதிப் பட்டியலை, அந்தந்த பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதேபோல், மாணவர்களின் ஹால் டிக்கெட், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கவலை அனைத்து பள்ளிகளுக்கும் பிப்., 20 முதல், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 'மாணவர்களுக்கு பிப்., 22 முதல், 27க்குள் ஹால் டிக்கெட் வழங்கப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுத் தேர்வுக்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பால், தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என, மாணவர்களும், பெற்றோரும் கவலை அடைந்துள்ளனர். செம்மைப்படுத்துவதில் சிக்கல் தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, நேற்று துவங்கியது. பட்டியலில் உள்ள, இறந்தவர்கள் பெயர்; ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்கள் பெயர்; தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்டுள்ள போலி வாக்காளர் பெயர் போன்றவற்றை வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து, தேவையற்ற பெயர்களை நீக்கும் பணி, பிப்., 29 வரை நடைபெறும்.அரசு ஊழியர் சங்கம், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், சென்னை தவிர பிற மாவட்டங்களில்,வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment