இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, January 17, 2016

மக்கள் தொகை விவரம் உறுதிபடுத்தும் பணி இன்று துவக்கம்


மக்கள் தொகை விவரங்களை உறுதிபடுத்தும் பணியை ஆசிரியர்கள் இன்று துவக்குகின்றனர். இந்தியாவில் கடந்த 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

2011ல் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை இன்று (ஜனவரி. 18) துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும். 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விவரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு ‘பிரின்ட் அவுட்’ செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்துடன் வீடுகளுக்குச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர்கள், குழந்தைகள் மற்றும் இதர விபரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, செல்போன் எண்களை கண்டிப்பாக கேட்டு பெற்று விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரத்தை சேகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், தாலுகாவிற்கு குறைந்தது 100 ஆசிரியர்கள் வீதம், மக்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பத்து தாலுகாக்களில் கிட்டத்தட்ட 1000 ஆசிரியர்கள் வரை ஈடுபடுவர். இப்பணியை பிப்ரவரி 5ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட ‘பிரின்ட் அவுட்’ விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வீடுகளுக்கு வரும் ஆசிரியர்களிடம் உண்மையான தகவலை வழங்கி ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment