இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, January 14, 2016

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி: தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக வட்டார அளவில் வருகிற 23-ஆம் தேதி தேர்வு நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில் அண்மையில் பெய்த மழை பாதிப்பால் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பருவத் தேர்வுகள் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளதாலும் தேசிய வருவாய் வழி உதவித் தொகைத் தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment