இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, March 28, 2015

அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள் 2 நாள் இரவு வரை நீட்டிப்பு

மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை திங்கள், செவ்வாய்க்கிழமைளில் இரவு 8 மணி வரை நீட்டித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் அரசு விடுமுறை வருவதை ஒட்டி ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில், இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி:

நிகழ் நிதியாண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதன்பின் தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அடிப்படையில், மார்ச் 30, 31-ஆம் தேதிகளில் இந்தியன் வங்கி மூலம் நடைபெறும் மத்திய, மாநில அரசுகளின் பணப் பரிவர்த்தனைகள் இரவு 8 மணி வரை நடைபெறும். மேலும், மின்னணு பணப் பரிவர்த்தனைகளும் மார்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை நாள்கள் விடுமுறை? தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மார்ச் 30-ஆம் தேதியும் (திங்கள்கிழமை), நிகழ் நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 31-ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல் செயல்படும்.

மேலும், வங்கிக் கணக்குகள் முடிக்கப்படுவதால் ஏப்ரல் 1-ஆம் தேதியும், ஏப்ரல் 2-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3-ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய மூன்று நாள்களும் தொடர் விடுமுறையாகும். ஏப்ரல் 4-ஆம் தேதி அரை நாள் மட்டும் செயல்படும். இதனால், அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை இரவு வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment