இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 30, 2013

தீபாவளி பண்டிகையின் போது விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும

அந்த சுற்றறிக்கையின்படி பள்ளிக்கூடங்களில் காலை நேரத்தில் நடைபெறும் இறைவணக்க கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் மாணவர்-மாணவிகளுக்கு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றி எடுத்துக்கூறுவார். பின்னர் வகுப்பறையிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்.

சுற்றறிக்கையில் விபத்தில்லாமல் பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

* பாட்டில்களில் பட்டாசு வைத்து வெடிக்காதீர்கள்

* பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள் உடுத்தாதீர்கள். இறுக்கமான ஆடைகளை அணியுங்கள். டெரிகாட்டான், டெர்லின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது

* பட்டாசு கொளுத்தும்போது அருகில் வாளி நிறைய தண்ணீர் வைத்துக்கொள்ளவேண்டும்.

* பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடம்புக்கு அருகாமையிலோ வெடிக்கவேண்டாம். மாறாக பாதுகாப்பாக தொலைவில் வைத்து வெடியுங்கள்.

* மூடிய பெட்டிகளில் பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்காதீர்கள்.

* ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.

* பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகள் முன்பாகவோ அருகிலோ வெடிக்காதீர்கள்.

* பெற்றோர்கள் முன்னிலையில் பட்டாசுகளை வெடியுங்கள்.

* விவரம் அறியாத சிறுவர்களை பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.

இந்த பாதுகாப்பு விதிமுறைகளை மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூறி, பள்ளிக்கூடங்களில் செயல்முறையில் பட்டாசு வெடித்தும் காட்டலாம் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment