இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, October 24, 2013

பழுதான கட்டடத்தில் வகுப்பு வேண்டாம் : பள்ளி கல்வி துறை உத்தரவு

"மழைக்காலம் துவங்கியுள்ளதால், பழுதடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: மழைக்காலம் துவங்கியுள்ளதால், பழுதடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். மின்ஒயர்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை, தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மழைநீர் தேங்கி நிற்கும் இடங்களில், மாணவர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது. சுகாதாரம் குறித்து இறைவணக்க வேளையின் போது, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏதாவது பிரச்னை இருப்பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்தச் சுற்றறிக்கை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment