இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, August 24, 2013

குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் அல்லது டிசம்பரில் வெளியீடு

குரூப்–4 தேர்வில் பொதுஅறிவில் இருந்து 100 கேள்விகளும், தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் இருந்து 100 கேள்விகளும் (மொத்தம் 200 கேள்விகள்) கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 1½ மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 300. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலே வேலை உறுதி. காரணம் குரூப்–4 தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. 

தேர்வு முடிந்த ஓரிரு நாளில் வினாக்களுக்கான ’கீ ஆன்சர்’ டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படும். விடைகளில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது தவறான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தாலோ அதுகுறித்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் டி.என்.பி.எஸ்.சி.யில் முறையிடலாம். டி.என்.பி.எஸ்.சி.யின் வருடாந்திர காலஅட்டவணையின்படி, தேர்வு முடிவு அடுத்த மாதம் (செப்டம்பர்) வெளியிடப்பட வேண்டும். தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் தேர்வு முடிவு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியிடப்படலாம்.

No comments:

Post a Comment