இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, December 29, 2016

தொகுப்பூதியம்-மதிப்பூதியம் பெறுவோருக்கு தனி உயர்வு


அரசுத் துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக ரூ.20 முதல் ரூ.40 வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு:

மாதத்துக்கு ரூ.600 வரை தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக மாதம் ரூ.20 அளிக்கப் படும். ரூ.600-க்கு மேலாக தொகுப்பூதியம்-நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக ரூ.40-ம் வழங்கப்படும். இந்த தனி உயர்வானது, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள், ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்ற பிரிவினருக்கு தனி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment