இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, December 20, 2016

2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது


2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு வரை பொதுதேர்வு நடைப்பெற்றது.

ஆனால் பல்வேறு காரணங்களுக்கு இந்த பொது தேர்வு நடைமுறை 2010-ஆம் ஆண்டோடு கைவிடப்பட்டது. இதனால் சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பில் பொது தேர்வை ஏதிர்கொள்வதால் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கல்வியாளர்கள் கருத்தை முன் வைத்தனர்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது என்றும், பொதுத்தேர்வை கட்டாயமாக்கும் பரிந்துரையை சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு ஏற்றதாத தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில் சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment