இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, July 28, 2015

உடல்நிலையை காரணம் காட்டி விருப்ப ஓய்வுபெற்று செல்பவர்கள் வேறு பணியில் சேர்ந்தால் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலிசபெத் ராஜாராம் (54). மகப்பேறு மருத்துவ நிபுணரான இவர், உடல்நலம் சரியில்லை என்று கூறி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை நிராகரித்து சுகாதாரத்துறைச் செயலர் 8.6.2015ல் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து விருப்ப ஓய்வு வழங்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எலிசபெத் ராஜாராம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்திய நாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. சுகாதாரத்துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரரின் மருத்துவப் பணி முக்கியமானது. அவரை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதித்தால் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படும். மேலும் அவர் இதுவரை அரசின் சலுகையை அனுபவித்துவிட்டு தற்போது விருப்ப ஓய்வு கேட்பதை ஏற்க முடியாது என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தான் சிகிச்சை அளித்தால் நோயாளிகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய சூழல் ஏற்படும் என மனுதாரர் தெரிவித்துள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவம் மேற்கொள்ளக்கூடிய தைரியமும், நம்பிக்கையும் இல்லை. அப்படியிருக்கும் சூழலில் பணியில் இருக்குமாறு கட்டாயப்படுத்துவது தேவையற்றது. மனுதாரர் தான் உடல்ரீதியில் பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கும்போது, அவரிடம் எப்படி சிகிச்சைக்கு வருவார்கள். அவர் சிறப் பாக பணிபுரிவார் என்பது கேள்விக் குறியாக இருக்கும்போது, அவரை தொடர்ந்து பணிபுரிய கட்டாயப் படுத்துவது தேவையற்றது. அவரைத் தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தால் அவருக்கும், மருத்துவமனைக்கும் பாதிப்பு ஏற்படும்.

ஒரு மருத்துவர் தன்னால் சிகிச்சை அளிக்க முடியாது என்று சொல்லும்போது அவரிடம் அரசு அதிகாரிகள் தங்களது குடும்பத்தினரை சிகிச்சைக்கு அனுப்புவார்களா? அவரை பணியில் இருக்கச் சொல்வதற்கு பதில், அவருக்கு தகுதியான ஒரு மருத்துவரை நியமனம் செய்யலாம். மருத்துவர்களுக்கு கட்டாய ஓய்வு தரக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது. அதே அரசாணையில் உடல்நல பாதிப்பைக் கூறி விருப்ப ஓய்வு கேட்டால் அவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க வேண்டுமா என்பது சொல்லப்படவில்லை. இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் தலையிட முடியும். அதன் அடிப்படையில் மனுதாரரின் மனு ஏற்கப்படுகிறது. மனுதாரருக்கு விருப்ப ஓய்வு மறுத்து 8.6.2015-ல் சுகாதாரத்துறைச் செயலர் பிறப் பித்த உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. மருத்துவர்கள் சிலர் துறைரீதியான நடவடிக்கையை சந்திக்க பயந்து உடல் நிலையை காரணம் காட்டி விருப்ப ஓய்வில் செல்கின்றனர். அதை தவிர்க்க வேண்டும். அப்படி விருப்ப ஓய்வில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல்நிலையை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படுகிறது.

விருப்ப ஓய்வுக்கு பிறகு மனுதாரர் வேறு மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடாது. அப்படி வேறு மருத்துவமனையில் சேர்ந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை வழங்கப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment