இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 29, 2015

செப்., 20 மத்திய பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு

சி.பி.எஸ்.இ. சார்பில் மத்திய அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு செப்., 20 ல் நடக்கிறது.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக் போன்ற பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க தகுதித்தேர்வு (சி.டி.இ.டி.,) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு செப்., 20 ல் நடக்கிறது. ஆறு முதல் 9 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான 2 ம் தாள் காலை 9:30 முதல் பகல் 12 மணி வரையும், ஒன்று முதல் 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான முதள் தாள் பகல் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரையும் நடக்கிறது. முதள் தாள் எழுத பிளஸ் 2 வில் 50 சதவீத மதிப்பெண்களும், 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டய படிப்பும் முடித்திருக்க வேண்டும்.இரண்டாம் தாள் எழுத பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், பி.எட்., படிப்பும் முடித்திருக்க வேண்டும்.

ஓ.பி.சி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத தேர்வு கட்டணம் ரூ.600 ம், இரண்டு தாள்களையும் சேர்த்து எழுத ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத ரூ.300, இரண்டு தாள்களையும் எழுத ரூ.500 செலுத்த வேண்டும்.இத்தேர்வுக்கு www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜூலை 30 முதல் ஆக., 19 வரை சமர்ப்பிக்கலாம். 'இ' சலானை ஆக., 20 வரை செலுத்தலாம். விண்ணப்ப திருத்தங்களை ஆக., 21 முதல் ஆக., 25 வரை செய்யலாம். செப்., 4 ல் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், என்றார்.

No comments:

Post a Comment