இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, March 11, 2016

அதிக சப்தமுள்ள ஒலி எழுப்பான்களை ஒப்படைக்க வேண்டும்:தமிழக அரசு உத்தரவு


நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, அதிக சப்தத்தை எழுப்பும் ஒலி எழுப்பான்களை பயன்படுத்தினால் அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தின் 119 (2)-ன் பிரிவின்படி, வாகனங்களில் 85 முதல் 105 டெசிபெல் அளவுக்குள் ஒலி எழுப்பும் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை மீறுவோருக்கு முதலில் ரூ.ஆயிரமும், தொடர்ந்தால் ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கலாம்.

இந்த நிலையில், அதிக ஒலி எழுப்பும் கருவிகளைப் பயன்படுத்துவோர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்து விட வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை ஆணையாளர் சத்யபிரத சாஹு இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment