இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 25, 2015

புதிதாக 32 நீதிமன்றங்கள்: முதல்வர்


தமிழகத்தில் 13 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், 9 குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 10 விரைவு நீதிமன்றங்கள் என மொத்தம் 32 நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண லால்குடி, கீரனூர், ஓமலூர், பரமத்தி, ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப்படும்.

கோவையில் 2 கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், மதுரையில் 3 கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், மணப்பாறை, அருப்புக்கோட்டை, திருமங்கலத்தில் ஒரு கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என 13 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. வாடிப்பட்டி, ஆண்டிப்பட்டி, ஓமலூர், கீரனூர், கும்பகோணம், பெரம்பலூர், தாம்பரம், ஆலந்தூர், பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் தலா ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வீதம் 9 குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். மொத்தம் 22 நீதிமன்றங்கள் ரூ.9 கோடியில் அமைக்கப்படும்.

விரைவு நீதிமன்றங்கள்: தேனி, பரமக்குடி, ஆரணி, நாகர்கோவில், விழுப்புரம், பழனி, மேட்டூர், கும்பகோணம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட நீதிபதி அளவிலான 10 விரைவு நீதிமன்றங்கள் ரூ.5 கோடியே 32 லட்சத்தில் அமைக்கப்படும்.

No comments:

Post a Comment