இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 23, 2015

பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம்.முதல்வர் அறிவிப்பு

அரசின் 107 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக, கடந்த 4 ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் முதல்வர் பேசியதாவது,
அரசின் 107 தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாக, கடந்த 4 ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 5 தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய தொடக்கப்பள்ளிகள் துவங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி்களில் 770 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment