இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, September 27, 2015

மதுரையில் 27.9.2015 அன்று நடந்த TNPTF மாநிலச் செயற்குழுதகவல் துளிகள்...

1).தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநடு வருகிற பிப்ரவரி 2016ல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்த மாநிலச் செயற்குழு ஒப்புதல்.

2).டிசம்பர் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும்பொழுது கல்வியை பாதுகாக்ககோரி மாபெரும் பேரணி - இந்திய தலைநகரில் நடத்த முடிவு. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க செயற்குழுவில் மாவட்டச் செயலாளர்கள் ஒப்புதல்.

3).நாளை (28.9.15) ஜேக்டோ உயர்மட்ட கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் செ.பாலச்சந்தர் பங்கேற்பு.

4).2016 இயக்க நாட்காட்டிக்கு துணைப்பொதுச் செயலாளர் தோழர் மயில் தலைமையில் குழு அமைப்பு. மாநிலப்பொறுப்பாளர்கள் முருகேசன்,ராஜா, ஜான் ஆகியோர் குழுவில் இடம்பெற மாநிலச் செயற்குழு ஒப்புதல்.

5).இயக்க இதழை மாத இதழாக மாற்ற முடிவு. ஆண்டுச்சந்தா ரூ120 ஆகவும்.
ஆயுள் சந்தா ரூ1200 ஆகவும் மாற்ற செயற்குழு முடிவு.

6). ஜனவரி 2016 முதல் புதிய பொழிவுடன் மாத இதழ் வெளியீடு.சந்தா மாற்றம் உடனடி அமுல். ஆண்டு சந்தாவிற்கு மட்டும் அக்டோபர் 31 வரை தவிர்ப்பு.

7).வருகிற அக்டோபர் 14 புது தில்லியில்அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் சார்பில் கருத்தரங்கம். மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலப்பொருளாளர் திரு.ஜீவானந்தம், துணைப்பொதுச் செயலாளர் திரு.மயில், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் திரு.சரவணன் பங்கேற்பு.

8).வருகிற 22, 23 ஹைதராபாத்தில் பெண் ஆசிரியர் மாநாடு. மாவட்டத்திற்கு ஒரு பெண் ஆசிரியர் வீதம் நமது அமைப்பிலிருந்து30பேர் பங்கேற்பு. பங்கேற்பாளர் விவரத்தினை அக்டோபர்5க்குள் தோழர் மலர்விழியிடம் மாவட்டச்செயலாளர்கள் சமரப்பிக்க வேண்டும்.

9).நோபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்காக நமது இயக்கத்தின் சார்பாக ரூ50000 அளிக்க மாநிலச் செயற்குழு ஒப்புதல்.

10).செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தைவெற்றிகரமாக்கியஉறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்க மாவட்ட கிளைக்கு உத்தரவு.

11).ஜேக்டோ வேலை நிறுத்தத்தை முழு மூச்சுடன் பணியாற்றி வெறிறகரமாக்கிட வேண்டுகோள்.

12).நாளை(28.9.2015)
மாநிலப் பொறுப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க தொடக்கக்கல்வி இயக்குனரை சந்திக்கின்றனர்.

13).திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் அநாகரிகமான செயலுக்கு முற்றுபுள்ளி வைக்க மாவட்ட கிளை மாபெரும் போராட்டம் நடத்த மாநிலச் செயற்குழு வழிகாட்டல். மாநிலத் தலைவர் தோழர் மோசஸ் பங்கேற்பு. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.கிருஷ்ணன் அழைப்பு. மாநிலச் செயற்குழு ஏற்பு.

No comments:

Post a Comment