இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, September 26, 2015

வாக்காளர் சேர்ப்பு மனுக்களை மொத்தமாக பெறத்தடை


புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு மனுக்களை, மொத்தமாக பெற தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் செப்.,15 முதல் அக்.,14 வரை சுருக்கத் திருத்தப் பணிகள் நடக்கின்றன. வரும், 2016 ஜன.,1 தகுதி நாளாகக்கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் புதிதாக சேர்ப்பது, பெயர்களை நீக்குவது, திருத்தம், முகவரி மாற்றத்திற்கு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், தாசில்தார், நகராட்சி கமிஷனர், ஆர்.டி.ஓ., விடம் மனு தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக ஓட்டுச்சாவடிகளில் செப்.,20 ல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அடுத்த முகாம் அக்.,4ம் தேதி நடக்கிறது. தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகை யில்,''பட்டியலில் போலி வாக்காளர்களை சேர்த்துவிடக்கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. அரசியல் கட்சி பிரமுகரோ அல்லது தனிநபரோ பெயர் சேர்க்க, பத்து விண்ணப்பங்களுக்கு மேல் தந்தால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,''என்றார்.

No comments:

Post a Comment