இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 02, 2015

'ஜாக்டோ' கூட்டமைப்பு அக்.8ல் வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 8ல் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய 'ஜாக்டோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.மத்திய அரசுக்கு இணையான ஊதியம், புதிய பென்ஷன் திட்டம் ரத்து, பணி பாதுகாப்பு, 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநியமன நாளில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக போராடி வந்தன.

இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத தால் 27 ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து 'ஜாக்டோ' அமைப்பு உருவாக்கி, ஆக., 1 ல் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தன. இதில் எதிர் கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர். போராட்டம் நடத்தி ஒரு மாதத்திற்கு மேலாகியும் எவ்வித அரசு அறிவிப்பும் இல்லாததால் அக்., 8 ல் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய 'ஜாக்டோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணதாஸ் கூறியதாவது: முதற்கட்டமாக அக்., 8 ல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். அரசு கண்டுகொள்ளாவிட்டால் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்து வோம், என்றார்.

No comments:

Post a Comment