இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 06, 2015

இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு நிறைவு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (சனிக் கிழமை) முடிவடைந்தது. 4 நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் மொத்தம் 1,510 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் (தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு) சேர 3,500-க் கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 2,760 பேருக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.

பயிற்சி பள்ளியை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 1-ம் தேதி தொடங்கியது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு சனிக்கிழமை முடிவடைந்தது. கலந்தாய்வின் நிறைவில் மொத்தம் 1,510 மாணவ-மாணவிகளுக்கு ஒதுக் கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment