இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, November 24, 2013

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நீக்க ஐகோர்ட் தடை

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் நவ. 7ல் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் சார் பிலும் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, பள்ளி கல்வி இயக்குனரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.

இந்நிலையில், தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆறுமுகம் உட்பட 10 ஆசிரியர்கள், ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். ஆறுமுகம் தனது மனுவில், ‘நான் பணி நியமனம் செய்யும்போது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறவில்லை. இதனால் என்னால் தகுதி தேர்வு எழுத முடியவில்லை. என் பணி நியமனத்தை அங்கீகரித்த மாவட்ட கல்வி அதிகாரி, 5 ஆண்டில் தகுதி தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என நிபந்தனை விதித்தார். அந்த 5 ஆண்டு காலக்கெடு முடியவில்லை. அதை கருத்தில் கொள்ளாமல் என்னை விசாரிக்காமலும், முன்கூட்டி நோட்டீஸ் அளிக்காமலும் என் பணி நியமனத்தை ரத்து செய்து மாவட்ட கல்வி அதிகாரி கடந்த 14ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி பள்ளி கல்வி இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கும், அந்த உத்தரவை தொடர்ந்து மனுதாரர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனுவுக்கு பதிலளிக்க பள்ளி கல்வி செயலாளர், இயக்குனர், தஞ்சாவூர் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டா

No comments:

Post a Comment