இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, November 20, 2013

டிசம்பர் 19-ந்தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

- சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை வங்கி ஊழியர்கள், டிசம்பர் 19-ந்தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் சங்க சம்மேளன கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் அஸ்வினி ராணா தெரிவித்தார்.

வங்கித்துறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அவர் கூறினார். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து கிடப்பில் போடப்பட்டுள்ள சம்பள உயர்வு கோரிக்கையை விரைவில் நிறைவேற்றக்கோரியும், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய திட்ட மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment