இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, November 19, 2016

தமிழகத்துக்கு புதிய 500 நோட்டு 25ம் தேதி வருகிறது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தகவல்


மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு ரூ. 10, 20, 50, 100 மற்றும் 2000 நோட்டுகள் மட்டுமே வங்கிகள், ஏடிஎம்களில் கிடைக்கிறது. ரூ.500 இதுவரை தமிழகத்துக்கு வந்து சேரவில்லை. இதனால், தமிழகத்தில் சில்லரை விற்பனை கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் கையில் 2000 பணத்தை வைத்துக் கொண்டு பொருட்கள் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். கையிருப்பில் உள்ள ரூ.100, ரூ.50 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வினியோகித்த போதிலும் சில்லரை தட்டுப்பாடு நீங்கவில்லை. இதனால் புதிய ரூ.500 நோட்டு வினியோகித்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு புதிய ரூ.500 நோட்டு எப்ேபாது வரும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகி வந்தது. இது குறித்து அந்த அதிகாரிகள் கூறுகையில்,

“ புதிய ரூ.500 நோட்டு ஒரு சில மாநிலங்களில் மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது. தமிழகத்துக்கு நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்கு அந்த பணம் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்படும். வருகிற 25ம் தேதி வங்கிகளில் புதிய ரூ.500 நோட்டு வினியோகிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்றார்.

No comments:

Post a Comment