இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, December 07, 2014

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பால் மாநகராட்சி பள்ளிகள் தனியாருக்கு விடுவது தற்காலிக நிறுத்தம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பால் மாநகராட்சி பள்ளிகள் தனியாருக்கு விடுவது தற்காலிக நிறுத்தம்

சென்னை மாநகராட்சி 7 பள்ளிகளை தனியாரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பால், அந்த முடிவை மாநகராட்சி ஒத்தி வைத்துள்ளது என்று அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி நடத்திவந்த 7 மாநகராட்சி பள்ளிக்கூடங்களை தனியாருக்கு ஒப்படைப்பது என்று முடிவெடுத்திருப்பதாக டிச.1அன்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பள்ளியை பொறுப்பேற்கும் தனி யாருக்கு, ஒரு மாண வருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உத வியை அளிக்கப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. அதேநேரத் தில் எந்தெந்தபள்ளிகள் என்று பெயர் அறிவிக்கப்படவில்லை.மாநகராட்சியின் இடம் , கட்டிடம் உள்ளிட்ட கட்ட மைப்புகளை தனியார் பயன்படுத்த அனுமதிப்பதுடன், பணத்தையும் தனியா ருக்கு கொடுக்கும் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வன்மையாக கண்டித் ததுடன், போராட்ட அறிவிப்புகளையும் கொடுத்தது.மேலும், கடந்த 29.11.2014 அன்றுஅரசுப் பள்ளி பாதுகாப்பு கருத்தரங்கையும் நடத்தி அதன் மூலம் பள்ளிகளை பாதுகாக்க இயக்கம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.இந்நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பால் 7 பள்ளிகளை தனி யாருக்கு விடுவதை மாநகராட்சி தற்காலி கமாக நிறுத்தி வைத் துள்ளது. மாநகராட்சி பள்ளிகளை தனியா ருக்கு விடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும். மாணவர் கள் குறைவாக உள்ள பள்ளிகளை பலப்படுத்த தேவையான முயற்சி களை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment