இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, December 25, 2014

கற்றல் திறன் வழிமுறை ஆசிரியர்களுக்கு அழைப்பு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை, கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 முதல், பள்ளிகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முப்பருவ கல்வி முறை செயல்படுத்தப்படுகிறது. இதில், மாணவர்களை முழுமையாக ஈடுபடுத்தவும், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், பல்வேறு வழிமுறைகளை, ஆசிரியர்கள் கையாண்டு வருகின்றனர்.

கற்றலில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிவது, அவர்களின் தனித்திறனை வளர்ப்பது, புதுமையான முறையில் பாடம் நடத்துவது போன்ற வழிமுறைகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் பின்பற்றுகின்றனர். தமிழ், ஆங்கில பாடங்களில் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் முயற்சியில், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆசிரியர்கள் பின்பற்றும் வெற்றிகரமான, புதுமையான முயற்சிகளை, அனைத்து பள்ளி ஆசிரியர்களும் தெரிந்து, பயன்படுத்த விரும்பியுள்ள கல்வித்துறை, அவ்வழிமுறைகளை இணையதளத்தில் பதிவு செய்யும்படி, அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, tணண்ஞிஞுணூt.ணிணூஞ்/டிணணணிதிச்tடிணிண என்ற இணையதளத்தில், ஜன., 15க்குள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 99767 08786 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.
tnscert.org/innovation

No comments:

Post a Comment