இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 23, 2018

5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு


பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி அடையாத, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மறு தேர்வு நடத்தி, அவர்கள் தேர்ச்சி பெற, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் அவர் கூறியதாவது:

மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ், ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில், 'ஆல் பாஸ்' நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், இறுதி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில், அவர்களுக்கு, இரண்டாவது முறையாக மறு தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த சட்ட திருத்த மசோதா, விரைவில், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment