இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 06, 2018

தகவல்

ஆதார்' அட்டையை, பிளாஸ்டிக் அட்டையில், 'பிரின்ட்' செய்வது, 'லேமினேட்' செய்வது தேவையில்லாத ஒன்று. அவ்வாறு செய்வதால், உங்களுடைய தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக, ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு:

ஆதார் பாதுகாப்பு தொடர்பாக, ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பூஷண் பாண்டே வெளியிட்டுள்ள செய்தி: ஆதார் எண் ஒதுக்கப்பட்டதற்கான கடிதம், ஆதார் அட்டை, மொபைல் ஆதார், சாதாரண காகிதத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அட்டைகளையே பயன்படுத்தலாம். அதே நேரத்தில், சிலர், பிளாஸ்டிக் அட்டையில் ஆதார் அட்டை பதிவு செய்துதருவதாகவும், 'லேமினேட்' செய்து தருவதாகவும் கூறுகின்றனர்.
இதற்காக, 50 - 300 ரூபாய் வரை, கட்டணமாக வசூலிக்கின்றனர். இது, தேவையில்லாத ஒன்று. இவ்வாறு லேமினேட் செய்வதால், ஆதார் அட்டையில் உள்ள, க்யூ.ஆர்., எனப்படும், தகவல்கள் பதிவு, சரியான முறையில் பதிவாகாது. அதனால், அந்த அட்டைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

தேவையில்லாதது :

இது தவிர, நம் ஆதார் எண்களை அவர்களுக்கு கொடுக்கும் போது, அதை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால், பிளாஸ்டிக் அட்டையில் பதிவு செய்வது, லேமினேட் செய்வது போன்றவை, தேவையில்லாத ஒன்று என்பதுடன், நம் பாதுகாப்புக்கு எதிராகவும் உள்ளது; இதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment