இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, January 19, 2018

போலியோ தடுப்பு மருந்து: பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


போலியோ தடுப்பு மருந்து குறித்து பெற்றோர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில், வரும் 28 மற்றும் மார்ச் 11 ஆகிய நாள்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது.

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம்களாக செயல்படவுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் காலை இறை வணக்கத்தின்போது இது குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டு நலப்பணித் திட்ட மாணவ தொண்டர்கள், தேசிய பாதுகாப்பு படை மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் இந்தப் பணிக்கான ஒத்துழைப்பை சிறப்பாக வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து இந்த முகாம்கள் சிறப்பாக செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment