இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 31, 2018

பிப்.15 முதல் பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறைத் தேர்வு நடத்த உத்தரவு


பிளஸ் 1 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிப். 15 முதல் பிப். 26-ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பாடத்திட்ட மாணவர்கள், நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் இந்தாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 200 மதிப்பெண்களுக்கு நடத்த வேண்டிய தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு அக மதிப் பெண் வழங்க தனியாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளி ஆய்வகங்களில் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்குவது குறித்து எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான சுற்றறிக்கை பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பிப். 14-ஆம் தேதி முதல், 26-ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும், செய்முறை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்; அகமதிப்பீடுக்கு, அதே பள்ளி ஆசிரியரும், செய்முறை தேர்வு கண்காணிப்புக்கு, மற்ற பள்ளி ஆசிரியரையும் பணியில் அமர்த்த, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பிளஸ் 1 வகுப்புக்கு ஏற்கெனவே இருக்கும் பாடத்திட்டத்தின்படி செய்முறை தேர்வை நடத்த வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் பின்பற்றப்படுவது போன்று செய்முறை மதிப்பீடு வழங்க வேண்டும். தேர்வுகளில், எந்த முறைகேடுக்கும் இடம் தரக்கூடாது; மாணவர்களின் மதிப்பெண்களை ரகசியமாக பதிவுசெய்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், ஆன்லைனில், தேர்வுத்துறைக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கு அறிவியல் பாடங்களுக்கு 30 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளது. பிற பாடங்களுக்கு 10 மதிப்பெண்களுக்கு அகமதிப்பீட்டுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 வகுப்புக்கு நாளை தொடக்கம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் 1-ஆம் தேதி துவங்குகிறது. அதனையொட்டி செய்முறை தேர்வுகள் பிப்.2-ஆம் தேதி முதல் பிப்.8-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் பிப்.14-ஆம் தேதி வரையிலும் இரண்டு கட்டங்களாக செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்

No comments:

Post a Comment