இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, January 20, 2018

அரசின் இரு சக்கர வாகன திட்டத்துக்கு நாளை முதல் பிப். 5வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு


தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

கியர் இல்லாத 125சிசி இயந்திரத் திறன் கொண்ட புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25 ஆயிரம் அதாவது 50 சதவீதம் தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும் என்றும், இரு சக்கர வாகனம் 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள், அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மகமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழி நடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதாரஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஊரின் கடைநிலைப்பகுதி மலைப்பகுதி, மகளிரை குடும்ப தலைவராக கொண்ட பெண், ஆதரவற்ற மகளிர், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி (பெண்), திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மகளிர் மற்றும் திருநங்கையினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கு மிகாமல் உள்ள பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பயனாளிகள் தங்களுக்கு விருப்பமுள்ள 125சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனத்தை சொந்த நிதியிலிருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்றும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். மேலும், மனுவுடன் பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, இருசக்கர வாகன உரிமம், ஆதார் அடையாள அட்டையின் நகல், உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் - நகல், வேலை வழங்கும் அலுவலரால், நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ், நிறுவனத் தலைவர் சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியுள்ளவர்களின் சான்றிதழ்கள், கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், சிறப்பு தகுதி பெற விரும்புவோர் அதற்குரிய சான்றிதழ், சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்) உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான மனுக்கள் நாளை முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், திருச்சி உட்பட மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 5ம் தேதி கடைசி நாள்.

No comments:

Post a Comment