இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, July 15, 2017

960 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் காமராஜர் விருது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


ஆண்டுதோறும் தமிழ்வழிக் கல்வியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளை ஒரு மாவட்டத்திற்கு 30 பேர் வீதம் 32 மாவட்டங்களுக்கும் 960 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு காமராஜர் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளஸ்-2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் 15 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு காமராஜர் விருதும், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9, 10, 11, 12-ம் வகுப்புகளை கணினி மயமாக்குவதற்காக ரூ.324 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ரூ.1 கோடியே 32 லட்சம் செலவில் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான அறிவிப்புகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment