இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, August 26, 2016

'வாட்ஸ் ஆப்' முடிவு - 'நெட்டிசன்'கள் கவலை


அலைபேசி செயலியான, 'வாட்ஸ் ஆப்' தன் வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்களை, 'பேஸ்புக்' வலைதள நிறுவனத்துடன் பகிர முடிவெடுத்து உள்ளது. இதனால், 'வாட்ஸ் ஆப்' உபயோகிப்பாளர்கள் கவலையடைந்து உள்ளனர். 'அலைபேசி இன்டர்நெட்' மூலமான தகவல் பரிமாற்றத்திற்கு, உலகெங்கிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

எனினும், 'வாட்ஸ் ஆப்' அலைபேசி செயலியை, 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இலவசமாக செய்தி, புகைப்படம், வீடியோ அனுப்புவதுடன், தொலை பேசியாகவும் பயன்படுவதால், நாளுக்கு நாள் அதன் வாடிக்கையாளர்கள் பெருகி வருகின்றனர். அதன் பிரபலத்தை பார்த்து, 'பேஸ்புக்' நிறுவனம், இரு ஆண்டுகளுக்கு முன் அதை வாங்கியது. முன்னதாக, வாட்ஸ் ஆப் நிறுவனம், 'விளம்பரங்களை வெளியிட்டு, தொல்லை தர மாட்டோம்' என, வாக்குறுதி அளித்திருந்தது;

பேஸ்புக் வாங்கிய பின்னும், அதே நிலை நீடித்து வந்தது. இந்நிலையில், புதிய விதிமுறைகளை வாட்ஸ் ஆப் வெளியிட்டு உள்ளது. அதன்படி, வாடிக்கையாளர் அலைபேசி எண்கள், பேஸ்புக்கிற்கு பகிரப்படும். பின், தனியார் நிறுவனங்கள், அந்நபர்களின் பேஸ்புக் பக்கத்திற்கு, தனிப்பட்ட முறையில் விளம்பரங்களை அனுப்பும் என, தெரிகிறது. வாடிக்கையாளர்களுக்கு, இது தொடர்பான விதிமுறைகளை, வாட்ஸ் ஆப் அனுப்ப துவங்கியுள்ளது. அதை ஏற்காவிட்டால், வாட்ஸ் ஆப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என, தெரிகிறது. அதை ஏற்காதவர்கள், 30 நாட்களுக்குள் இறுதி முடிவை எடுக்க, வாட்ஸ் ஆப் அவகாசம் தந்துள்ளது.

சமீபத்தில் தான், வாட்ஸ் ஆப், தங்கள் வாடிக்கையாளர்கள், அவர்களுக்குள் அனுப்பும் தகவலை, வேறு யாரும் பார்க்காத வகையில் நடவடிக்கை எடுத்தது. அந்த மகிழ்ச்சி நீடிக்காத வகையில், தனிநபர் உரிமையில், வேறு விதமாக தலையிட துவங்கி உள்ளது. அதனால், 'வைபர், வீசாட், ஐமோ' போன்ற போட்டி நிறுவனங்களுக்கு, வாடிக்கையாளர்கள் தாவும் நிலை ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment