இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, February 19, 2014

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அதிகாரிகள் ஆலோசனை 25ம் தேதி நடக்கிறது

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக  சென்னையில்  வருகிற 25ம¢ தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டத்திற்கு  பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு  செய்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக் கல்வி அலு வலர்கள், மாவட்ட  கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலு  வலர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம்  வரும் 25ம்  தேதி காலை 9 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் அமைந்து உள்ள  தமிழ்நாடு மாசு கட்டு ப்பாட்டு வாரிய கூட்டரங்கில் நடக்கிறது.

இதில் பள்ளிக் கல்வித்  துறை அமைச்சர் வீரமணி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைசெயலாளர் சபிதா   ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் பிளஸ்2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தேர்ச்சி  விகிதம்  அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வ¤வாதிக்கப்படுகிறது. இதற்கான  ஏற்பாடுகளை பள்ளிக் க ல்வித் துறை செய்து வருகிறது.

No comments:

Post a Comment