இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, December 29, 2013

குரூப் - 1 தேர்வு ஏப்., 26ம் தேதி நடக்கிறது

டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 முதல்நிலை தேர்வு, ஏப்., 26ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காலியாக உள்ள, துணை கலெக்டர் 3, டி.எஸ்.பி., 33, வணிக வரித்துறை உதவி ஆணையர் -0 33, உதவி இயக்குனர் 10 ஆகிய பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை நியமிப்பதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு, ஜன., 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்த ஜன., 30ம் தேதி கடைசி நாள். முதல்நிலை தேர்வு ஏப்., 26ம் தேதி நடத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment