இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 15, 2013

குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு: பிப்ரவரி 22-ல் நேர்காணல் B

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.)குரூப் 2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம் மாதம் 22-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறுகிறது. குரூப் 2 பிரிவுக்கு உள்பட்ட 3,631 பணியிடங்களுக்கு கடந்த நவம்பர் 4-ம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 12- ல் நடைபெற்ற குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மறு தேர்வு கடந்த நவம்பர் 4-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் குரூப் 2-ன் கீழ் வருகின்றன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம் மாதம் 22-ம் தேதி நேர்காணல் நடைபெறும் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment