இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 01, 2013

பிளஸ் 2 பொது தேர்வில் பிட் அடித்தால் 2 ஆண்டு தேர்வு எழுத முடியாது கருத்துகள

பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் 2 ஆண்டுக்கு தேர்வு எழுத முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. வழக்கம் போல இந்த ஆண்டும் தேர்வு மையங்களுக்கு செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்று தேர்வு துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி  முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் இந்த தேர்வு சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட அளவிலான ஆய்வு அலுவலர்களின் கூட்டம்  சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

சென்னையில் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 10 பறக்கும் படையும், தென்சென்னை, மத்திய சென்னை, கிழக்கு சென்னை, வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 4 பறக்கும் படைகள் அமைக்கப்படும். மேலும் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட் டுள்ள பறக்கும் படைகளும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  பிளஸ் 2 தேர்வுக்காக, தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 2800 தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள

். பிளஸ் 2 தேர்வில் ஒழுங்கீன செயலில் ஈடுபடுவோரை தடுக்க தமிழ் நாடு அரசு தேர்வுத்துறை பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதன் படி, தேர்வு அறைக்குள் துண்டுச்சீட்டு வைத்திருந்தாலோ, அச்சிடப்பட்ட புத்தகத்தை வைத்திருந்தாலோ ஓராண்டு அவர்கள் தேர்வு எழுத தடை விதித்தும், துண்டுச்சீட்டு பார்த்து எழுதுதல் மற்ற மாணவர்களின் விடைத்தாட்களை பார்த்து எழுதுதல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்களை இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் தேர்வு நேரத்திலோ அல்லது தேர்வு முடிந்து வெளியில் செல்லும்போதோ முறைகேடான செயல்களில் நடந்துகொள்ளும் மாணவர்கள், மற்ற மாணவர்களின் விடைத்தாட்களை வாங்கி எழுதுவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நிரந்தரமாக தேர்வு எழுத தடைவிதித்தும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில், தவறான முறையில் தேர்வு நடைபெறுவதாக திடீர் ஆய்வின் போது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் பள்ளிகளாக இருந்தால் தேர்வு மையம் மற்றும் அங்கீகாரம் ரத்து செய்வதுடன் அப்பள்ளி மாணவர்களை வேறொரு பள்ளியுடன் சேர்த்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும்

. தேர்வு அறைக்குள் அறை கண்காணிப்பாளர்,  தேர்வெழுதும் மாணவ, மாணவியர் கண்டிப்பாக  செல்போன், பேஜர் வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி வைத்திருந்தால் துறை அலுவலர் கள் அல்லது போலீசார்  அவற்றை பறிமுதல் செய்து  மேல்தொடர் நடவடிக்கை எடுப்பார்கள்.

No comments:

Post a Comment