இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 24, 2012

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசெயற்குழு கூட்டம்

நாமக்கல்லில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில பொருளாளர் மோசஸ் வரவு, செலவு கணக்குளை வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் செல்வராசன் பேசினார்.

கூட்டததில், ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைந்து, மூன்று நபர் அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில், ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, நவம்பர், 7ம் தேதி, மாநிலம் முழுவதும் வட்டாரத் தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில துணைத் தலைவர் மலர்விழி, சந்திரமோகன், மாநிலச் செயலாளர்கள் மணிமேகலை, முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment