இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 17, 2012

"தமிழகத்தில் 46% பள்ளிகளில் கழிப்பிட வசதியில்லை"-

  அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால், பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், பள்ளிப் படிப்பை தொடருவதற்கு தயக்கம் காட்டுவது, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சைல்டு ரைட்ஸ் அண்டு யூ (Child Rights and You) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த சென்னையில் உள்ள 100 குடும்பங்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் 94 சதவிகிதம் பேர், போதிய சுகாதார வசதி இல்லாத காரணத்தினால், தங்களின் பெண் குழந்தைகளை, பள்ளிகளில் இருந்து நிறுத்தி விடுவதாக கூறினர். இதே நிறுவனம், டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நகரங்களிலும் ஆய்வை நடத்தியது. தமிழகத்தில் செயல்படும் 46% பள்ளிகளில் முறையான கழிப்பிட வசதி இல்லை என்பதும் இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாதது, பெண் ஆசிரியர்கள் பற்றாக்குறை, இளம் வயதிலேயே திருமணம் போன்ற பல்வேறு காரணங்களால், மாணவிகளின் எண்ணிக்கை சரிந்து வருவதாக அந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த ஆய்வில் சென்னையைச் சேர்ந்த பெற்றோர் பலருக்கு, கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு முறையான, சுகாதாரமான கழிப்பிட வசதியை பள்ளிகள் செய்து தர வேண்டும் என்ற விதிமுறை தெரிந்திருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 85% பெற்றோருக்கு கட்டாயக் கல்விச் சட்டம் என்ற சட்டம் இருப்பதே தெரியவில்லை. ்

No comments:

Post a Comment