இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, October 24, 2012

தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பளம் உயர்வு

எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகத்தின் கீழ், பணியாற்றி வரும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு, 15 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், 5,000 ஊழியர், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும், 1,500 ஊழியர்களுக்கு, 15 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள, 3,500 ஊழியர், பணியில் சேர்ந்து, சில ஆண்டுகளே ஆவதால், அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப் படவில்லை. 1,500 பேருக்கு, சம்பள உயர்வு வழங்கிய தமிழக அரசுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்கக பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலர் கபிலன், நன்றி தெரிவித்துள்ளார்.

தொகுப்பூதிய ஊழியர்களை, பணிவரன் முறை செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.

No comments:

Post a Comment