இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, October 13, 2012

இன்று டி.இ.டி., மறு தேர்வு : 6.16 லட்சம் பேர் பங்கேற்பு

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்தும் டி.இ.டி., தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 6.16 லட்சம் தேர்வர் பங்கேற்கின்றனர். ஜூலையில் நடந்த டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர், தோல்வி அடைந்தனர். கடந்த மாதம், 17 ஆயிரம் பேர், புதிதாக விண்ணப்பித்தனர்.

இவர்களுக்கான டி.இ.டி., தேர்வு, இன்று, 1,094 மையங்களில் நடக்கின்றன. காலையில், இடைநிலை ஆசிரியருக்கான தேர்வும், பிற்பகலில், பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வும் நடக்கிறது. முதல் தாள் தேர்வை, 2.52 லட்சம் பேரும், இரண்டாம் தாள் தேர்வை, 3.64 லட்சம் பேரும் எழுதுகின்றனர். இரு தாள்களையும் சேர்த்து, 58 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். முந்தைய தேர்வில், தேர்வு எழுத வெறும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது. இன்றைய தேர்வுக்கு, 3 மணி நேரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், முந்தைய தேர்வைப்போல், தேர்வர் தரப்பில் புகார் எழாது எனவும், நிதானமாக தேர்வர் விடை அளிக்க முடியும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்தது.

72 சதவீதம் பேர் பெண்கள் : முதல் தாள் தேர்வில், 24.20 சதவீதம் பேர் ஆண்கள்; 75.80 சதவீதம் பேர் பெண்கள். இரண்டாம் தாள் எழுதுவோரில், 30.30 சதவீதம் பேர், ஆண்கள்; 69.70 சதவீதம் பேர் பெண்கள். மொத்தத்தில், ஆண்கள், 27.80 சதவீதம் பேரும், பெண்கள், 72.20 சதவீதம் பேரும், தேர்வெழுதுகின்றன

No comments:

Post a Comment