இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 09, 2019

திறனறி தேர்வு முடிவு வெளியீடு

தேசிய திறனறித் தேர்வின் முதற்கட்ட தேர்வு முடிவு வெளியீடு

10-ம் வகுப்பு முடித்து மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நடத்தப்பட்ட தேசிய திறனறித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2018 நவம்பரில் தமிழகம் முழுவதும் 1.59 லட்சம் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் எழுதிய தேசிய திறனறித் தேர்வு முடிவுகளை தற்போது அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

11-ம் வகுப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனறித் தேர்வு முடிவுகள் www.dge2.tn.nic.in என்ற தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மாநில அளவில் தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படும். பின்னர் இரண்டாம் கட்டமாக தேசிய அளவில் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாநில அளவில் நடத்தப்பட்ட முதற்கட்ட தேர்வு முடிவுகளைத் தான் தற்போது, தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment