இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, April 21, 2019

பொறியியல் கலந்தாய்வு


மே 2-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 3-ந் தேதி தொடங்குகிறது

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பி.இ., பி.டெக் போன்ற என்ஜினீயரிங் சேர்க்கைக்கான தற்காலிக அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

பி.இ., பி.டெக். படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலமே பெறப்பட்டன. அதேபோன்று கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே பெறப்படுகிறது. கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுகிறது.

மாணவ-மாணவிகள் மே 2-ந் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்ப மே 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் 3-ந் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதைத்தொடர்ந்து ஜூன் 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் செயல்படும் 42 உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடை பெறும். இதன்பின்பு, ஜூன் 17-ந் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப் படும்.

இதைத்தொடர்ந்து ஜூன் 20-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஜூன் 20-ந் தேதியும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 21-ந் தேதியும், விளையாட்டு வீரர் களுக்கு 22-ந் தேதியும் நேரடி சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது.

பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. தொழிற் கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கலந்தாய்வை பொறுத்தமட்டில் நேரடியாக நடத்தப்படுகிறது.

அதேபோன்று துணை கலந்தாய்வு ஜூலை மாதம் 29-ந் தேதியும், அருந்ததியர்களுக்கான ஒதுக்கீட்டு காலி இடங்களில் ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகளை சேர்த்துக்கொள்வதற்கான கலந்தாய்வு ஜூலை 30-ந் தேதியும் நேரடியாக நடக்கிறது.

என்ஜினீயரிங் படிப்புக் கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதனால் நேரடி கலந்தாய்வை பொறுத்தமட்டில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாணவ-மாணவிகள் தங்களது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட உள்ள உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பங்களை அனுப்பலாம். உதவி மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தங்களது இ-மெயில் முகவரியை தெரிவிக்க வேண்டும். எனவே, மாணவ-மாணவிகள் முன்னதாகவே இ-மெயில் முகவரியை உருவாக்கி தயாராக வைத்துக்கொள்வது நல்லது. அதேபோன்று மாணவ-மாணவிகள் தங்களது செல்போன் எண்ணையே விண்ணப்பிக்கும் போது தெரிவிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் குறிப்பிடும் செல்போன் எண், இ-மெயில் முகவரிக்கு தான் விண்ணப்பத்தில் உள்ள குறைபாடு, கலந்தாய்வு போன்ற அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும்.

செல்போன் எண், இ-மெயில் முகவரியை சரியாக கொடுக்கும்பட்சத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் மாணவ-மாணவிகள் கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கு பிடித்தமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment