இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, April 11, 2019

ஏப்.16, 17 ல் அனைத்து பள்ளிகளையும் திறக்க உத்தரவு


தமிழகத்தில் லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தல்களை முன்னிட்டு அனைத்து பள்ளிகளையும் ஏப்.,16 மற்றும் 17 திறந்து வைக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்.,18 ஓட்டுப் பதிவு நடக்கிறது.

இதையொட்டி மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு, உதவி பெறும், மெட்ரிக் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்.,13 கோடை விடுமுறை துவங்குகிறது. ஏப்.,18 ஓட்டுப் பதிவு என்பதால் ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வசதியாக இரண்டு நாட்களுக்கு முன்பே ஓட்டுச்சாவடி அமைந்துள்ள அனைத்து வகை பள்ளிகளையும் திறந்து வைக்கவும், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் ஒரு உதவியாளர் பள்ளியில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment