இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, May 24, 2015

ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் ஆன் லைன் அப்ளிகேஷன்

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பம், முதன்முறையாக, இந்த ஆண்டில் இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டில், 9.45 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு, 1,129 காலியிடங்களுக்கு, 13 லட்சம் பேர் விண்ணப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்வில், இந்த ஆண்டு, இரண்டு புதுமைகள் செய்யப்பட்டு உள்ளன. ஒன்று, யு.பி.எஸ்.சி., யின், தீதீதீ.தணீண்ஞிணிணடூடிணஞு.ணடிஞி.டிண இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்; தபால் மூலம் விண்ணப்பிக்க முடியாது. அது போல, 'ஹால் டிக்கெட்'டும், தபால் மூலம் கிடைக்காது.இரண்டாவது, ஐ.ஏ.எஸ்., பணிக்கு விண்ணப்பிக்கிறோமா, ஐ.பி.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்கிறோமா என்பதை, விண்ணப்பம் செய்யும் போதே குறிப்பிட வேண்டியது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பம் அனுப்புவது, 23ம் தேதி துவங்கியது. அடுத்த மாதம், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஆக., 23ம் தேதி, தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும், 3,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment