இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, August 30, 2018

வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் நாளை வெளியீடு


சட்டசபை தேர்தல் நடக்க உள்ள, நான்கு மாநிலங்களை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், திருத்தப் பணிக்காக, வரைவு வாக்காளர் பட்டியல், நாளை வெளியிடப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடைபெறும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நாளை துவங்க உள்ளது.

இதற்காக, அனைத்து மாநிலங்களிலும், சட்டசபை தொகுதி வாரியாக, நாளை காலை, 10:00 மணிக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.வரைவு பட்டியலில், பெயர் விடுபட்டவர்களும், 2019 ஜன., 1ல், 18 வயதை பூர்த்தி செய்பவர்களும், பெயர் சேர்க்க, அக்., 31 வரை விண்ணப்பிக்கலாம். பெயர், முகவரி திருத்தம் மேற்கொள்ளவும், இடமாற்றம் மற்றும் பெயர் நீக்கவும், நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.சட்டசபை தேர்தல் நடக்க உள்ள, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்கள் தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்திலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்க கூட்டங்களில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் முகாம், செப்., 8, 22 மற்றும் அக்., 6, 13ம் தேதிகளில் நடைபெறும்.ஓட்டுச்சாவடிகளில், செப்., 9, 23 மற்றும் அக்., 7, 14ம் தேதிகளில், சிறப்பு முகாம் நடத்தப்படும்.

விண்ணப்பங்களை, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி, நவ., 16ல் நிறைவடையும். விண்ணப்ப படிவங்கள் அனைத்தையும், கள ஆய்வு செய்யும் பணி, டிச., 1ல் நிறைவடையும்.'அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், 2019 ஜன., 4ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடத்தினார். இன்று, சென்னை, தலைமை செயலகத்தில், காலை, 11:00 மணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம் நடக்கிறது.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிக்காக, 10 நாட்களாக, எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை. செப்., 1ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதையொட்டி, இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும், ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அவர்களுக்கு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும்.பட்டியலில், தவறு இருந்தால் சுட்டிக்காட்டும்படி தெரிவிக்க உள்ளோம்.வரைவு வாக்காளர் பட்டியல், கிராம சபை கூட்டத்தில் வைத்து, ஒப்புதல் பெறப்படும். வாக்காளர் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். வரைவு பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment