இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, March 20, 2018

பள்ளி நிதி செலவினம்: அறிக்கை தயாரிப்பு மும்முரம்


தமிழகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், ஏப்., 20ம் தேதியுடன் முடிவடைகின்றன. மற்ற வகுப்புகளுக்கும், ஏப்., 19ம் தேதிக்குள் மூன்றாம் பருவ தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோடை விடுமுறை முன்கூட்டியே வழங்க திட்டமிட்டுள்ளதால், கடந்தாண்டு போல அல்லாமல், தேர்வுகளும் விரைவாக நடத்தப்படுகின்றன.

அதற்குள் பள்ளிகளுக்கு, அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதித்தொகைக்கான, வரவு-செலவு குறித்த அறிக்கை தயாரித்து சமர்ப்பிப்பது வழக்கம். இதில், இடம்பெற்ற தகவல்கள் ஆதாரப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில், கல்வித்துறை சார்பில், தடையின்மை சான்று வழங்கப்படும்.இது பெற்றால் மட்டுமே, அடுத்த கல்வியாண்டில் தொடர்ந்து, அரசின் திட்டங்களில் பங்கேற்க முடியும். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும், 7,500 ரூபாய், பராமரிப்பு செலவினத்திற்கு வழங்கப்படுகிறது.

அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ், 15 ஆயிரம் ரூபாய், பராமரிப்பு தொகையாக, ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுதவிர, ஆண்டுவிழாவுக்கு பிரத்யேக நிதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த தொகையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து செலவினங்களுக்கும், ரசீது இணைத்து அறிக்கை தயார் செய்ய வேண்டியது அவசியம்.இப்பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,

'பள்ளி வேலை நாள் முன்கூட்டியே முடிவதால், நிர்வாக பணிகளும் முடிக்க வேண்டியுள்ளது. எனவே, பள்ளி வரவு-செலவு அறிக்கை தயாரித்து, கல்வித்துறை திட்ட அலுவலகங்களில், 'ஆடிட்டிங்' சமர்ப்பிக்க, பணிகள் நடக்கின்றன' என்றனர்.

No comments:

Post a Comment