இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, March 25, 2018

ஆண்டுக் கணக்கு முடிக்கும் நாள் மாற்றம்: ஏப். 1, 2-இல் வங்கிகள் இயங்காது


நிகழ் நிதியாண்டின் (2017-18) வங்கிக் கணக்கு முடிக்கும் நாள் ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து (ஞாயிற்றுக்கிழமை) ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு (திங்கள்கிழமை) மாற்றப்பட்டுள்ளது. எனவே, இரு தினங்களிலும் வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவையைப் பெற முடியாது. இதுதொடர்பாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கை:-

ஒவ்வொரு நிதியாண்டிலும் ஆண்டு இறுதி வங்கிக் கணக்குகள் முடிக்கும் நாள் ஏப்ரல் 1-ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மேலும், சில மாநிலங்களில் அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை தினமும் கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டுமென இந்திய வங்கிகள் நிர்வாகத் தரப்பிடம் (ஐபிஏ) அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இந்தக் கோரிக்கை குறித்து கலந்தாலோசனை செய்தது.

இதைத் தொடர்ந்து, நிகழ் நிதியாண்டில் ஆண்டு இறுதி வங்கிக் கணக்குகள் முடிக்கும் நாளை ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு மாற்றுவதென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. மேலும், வங்கிக் கணக்குகள் முடிக்கும் மாற்றுத் தேதி (ஏப்ரல் 2) குறித்த தகவலை மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்துமாறு தனது பிராந்திய அலுவலகங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

மார்ச் 29, 30 வங்கிகள் விடுமுறை: வரும் வியாழக்கிழமை (மார்ச் 29), வரும் வெள்ளிக்கிழமை (30) ஆகிய இரு தினங்களும் அரசு விடுமுறை என்பதால் வங்கிகள் இயங்காது. எனினும், வரும் மார்ச் 31 என்பது மாதத்தின் ஐந்தாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் செயல்படும். வாடிக்கையாளர்கள் வங்கிகளின் சேவைகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment