இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, September 18, 2017

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: அரசு தரப்பில் பதில் மனு


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்காக ஒவ்வோர் அரசு ஊழியரும் தனது மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் இருந்து 10 சதவீதத்தை பங்களிப்பாகச் செலுத்தி வருகின்றனர். ஊழியர்களின் பங்களிப்புத் தொகையோடு, அரசும் தன் பங்களிப்பை தவறாமல் பொதுக் கணக்கில் செலுத்தி வருகிறது. கடந்த 2017 மார்ச் 31-ஆம் தேதி வரை இந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 18 ஆயிரத்து 16 கோடியாக உள்ளது. 2016-2017 ஆம் ஆண்டுக்கான கணக்கு விவரங்களும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்கள் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பணி ஓய்வு, திடீர் மரணம், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு உடனடியாக அவர்களின் கணக்கு முடிக்கப்பட்டு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.கருவூல கணக்குத்துறை அறிக்கையின்படி கடந்த ஆக. 31-ஆம் தேதி வரை தன் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கை முடித்து வழங்கக்கோரி 7,409 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி ஓய்வுபெற்ற, ராஜினாமா செய்த மற்றும் இறந்த ஊழியர்களின் சார்பில் 3,288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.125 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 317-க்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் தொய்வின்றி தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி, வரும் செப்.22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment