இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, December 29, 2016

செல்லிடப்பேசியில் பாதுகாப்பான வங்கி பரிவர்த்தனை எப்படி? மத்திய வருவாய்த் துறை முன்னாள் செயலர் விளக்கம்


செல்லிடப்பேசியில் வங்கிப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு முன்பு அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு செல்லிடப்பேசியில் வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்வது எவ்வாறு என்பது குறித்து பயிற்சிகள் அளிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்கான கொள்கை முடிவை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டியது அவசியம்.

செல்லிடப்பேசிகள் தயாரிப்பில் வெளிநாட்டினரே முன்னணியில் இருப்பதால் அவை பெரும்பாலும் ஆங்கில மொழியை அடிப்படையாகக் கொண்டே அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. இந்திய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு ஏற்றவாறு அவற்றில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

செல்லிடப்பேசிகளில் வாட்ஸ் அப், முகநூல்கள் மூலமாக வரும் லிங்க்குகளை (வலைதள முகவரிகள்) நேரடியாகத் திறந்து பார்ப்பதைத் தவிர்ப்பதன் மூலம் நமது தகவல்கள் திருடப்படாதவாறு பாதுகாக்க முடியும்.

ஏடிஎம் அட்டைகளுக்கான கடவுச் சொற்களை ஏதாவது ஒரு இடத்தில் எழுதி வைக்கும்போது அதை நேரடியாகக் குறிப்பிடாமல் அந்த கடவுச்சொல் நமக்கும் மட்டுமே புரியும் வகையிலான குறியீட்டை மட்டும் எழுதி வைக்கலாம்.

குழந்தைகள்- மனைவியின் பிறந்த தினம், நெருங்கிய நண்பரின் பெயர் போன்றவற்றை அதற்கு உதாரணங்களாகக் கூறலாம். இணைய வழி வங்கிச் சேவையை (நெட் பேங்கிங்) மேற்கொள்ளும்போது கடினமான கடவுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.

ஆல்ஃபா நியூமரிக் எனப்படும் ஆங்கில எழுத்துகள்- எண்களுடன் கூடிய கடவுச் சொற்களைப் பயன்படுத்துவது சிறந்தது. எந்தவொரு இணையப் பரிவர்த்தனைக்கும் பற்று அட்டையைக் (டெபிட் கார்டு) காட்டிலும், கடன் அட்டையைப் (கிரடிட் கார்டு) பயன்படுத்துவதே பாதுகாப்பானதாகும். ஏனெனில் கடன் அட்டைகள் காப்பீடு பெற்றிருப்பதுடன் அந்த அட்டையைப் பயன்படுத்தும்போது ரகசியக் குறியீடுகள் களவாடப்படாத பொறுப்பை வங்கிகளும் கண்காணிக்கின்றன.

அமெரிக்காவில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் கடன் அட்டையால் மேற்கொள்ளப்படுவதே இதற்கு சான்றாகும்.

அதேபோன்று வங்கிப் பரிவர்த்தனைகளை அதிகளவில் மேற்கொள்வோர் இரு வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது சிறப்பான ஒன்று. இதைத் தொடர்ந்து பரிவர்த்தனைகளை பிரதான அல்லது அதிக பணமிருக்கும் வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ளாமல் கூடுதல் வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.

பி.ஓ.எஸ். எனப்படும் பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் பற்று, கடன் அட்டைகளை ஸ்வைப் செய்யும்போது அதில் நமது வங்கிக் கணக்கின் ஐ.எஃப்.எஸ். குறியீடு காட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கடைகள், பெட்ரோல் நிலையங்கள் என எந்தப் பரிவர்த்தனைக்கு அட்டைகளைப் பயன்படுத்தினாலும் அதற்குரிய கடவுச் சொல்லை நாம் மட்டுமே தட்டச்சு செய்ய வேண்டும் என்றார் அவர்.

தொகுப்பூதியம்-மதிப்பூதியம் பெறுவோருக்கு தனி உயர்வு


அரசுத் துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக ரூ.20 முதல் ரூ.40 வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட உத்தரவு:

மாதத்துக்கு ரூ.600 வரை தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக மாதம் ரூ.20 அளிக்கப் படும். ரூ.600-க்கு மேலாக தொகுப்பூதியம்-நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு தனி உயர்வாக ரூ.40-ம் வழங்கப்படும். இந்த தனி உயர்வானது, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள், ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்ற பிரிவினருக்கு தனி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் சண்முகம் தெரிவித்துள்ளார்.

PRIMARY - 3 rd TERM FA(a) & FA(b) ACTIVITIES, DICTATION WORDS & TAMIL MEANINGS

Click below

http://www.asiriyar.com/2016/12/primary-3-rd-term-faa-fab-activities.html?m=1

Tuesday, December 27, 2016

கல்வி தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது, பிளஸ்-2 மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றினால் கடும் நடவடிக்கை


கல்வி தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேறு பள்ளிக்கு மாற்ற சான்றிதழ் 2016-17-ம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய (பெயிலாகும் நிலையில் உள்ள) மாணவ- மாணவியர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்று வேறு பள்ளிக்கு செல்ல வற்புறுத்துவதாக புகார்கள் இவ்வியக்கத்தில் பெறப்பட்டு வருகின்றன.

நடவடிக்கை

எனவே இக்கல்வி ஆண்டு (2016-17) வருகை பதிவேட்டில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளின் பெயர் கட்டாயம் அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பும் பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும், எவர் பெயரேனும் விடுபட்டால் பொறுப்பான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இச்சுற்றறிக்கையின் நகலினை தமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அளித்து உரிய ஒப்புதலை பெற்று தமது அலுவலக கோப்பில் வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ச.கண்ணப்பன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பள்ளிக்கு செல்போன்கள் கொண்டு வரும் மாணவ மாணவிகளை தடுக்க நடவடிக்கை


தகவல்களை பரிமாறிக்கொள்ள சம்பந்தப்பட்ட நபரை பல கிலோ மீட்டர் கடந்து சென்று பார்க்க வேண்டிய சூழலை மாற்றியது கம்பி வழி தொலைபேசி. அதிலிருந்தும் மாற்றியது செல்போன். இன்று செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். சிலர் 2, 3 செல்போன்களை வைத்திருக்கின்றனர். இந்த செல்போனின் அபார வளர்ச்சி காரணமாக வாட்ஸ்அப், பேஸ்புக் மட்டுமின்றி நேரில் சந்திப்பதை போன்று வீடியோ அழைப்புகளிலும் நினைத்தவுடன் பேசிக்கொள்ளும் வசதிகள் வந்துவிட்டது. ஆன்ட்ராய்டு செல்போன் பயன்பாடு உச்சத்தை எட்டியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் செல்போன் இல்லாத வீடுகளே கிடையாது. அறிவு சார்ந்த தகவல்கள் எது வேண்டுமானாலும் புத்தகத்தை புரட்டி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. செல்போன் மூலம் இணையதளத்தில் உலக விஷயங்கள் கையடக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் செல்போன்களை அறிவுசார்ந்த விஷயங்களுக்கு பயன்படுத்துவதை விட அழிவு சார்ந்த விஷயங்களுக்கு அதிகப்படியானோர் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் வேதனை. சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் இந்தியாவில் உள்ள இளைஞர்கள் சராசரியாக வாரத்துக்கு 48 மணிநேரம் ஆபாச படங்களை பார்க்கின்றனர் என்பதே இதற்கு சாட்சி.

இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் ஆங்காங்கே வாட்ஸ் அப், காதில் ஹெட் போன்களை மாட்டிக் கொண்டு பாட்டு கேட்பது, கேம்ஸ் விளையாடுவது என குனிந்த தலை நிமிராமல் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களையும் கவனிக்காமல் செல்போன்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், எதிர்காலத்தில் சிறிய பிரச்னைகளையும் சவாலாக எடுத்துக் கொண்டு சந்திக்கும் மனநிலை மாறிவிடுகிறது. சாதாரண பிரச்னைக்கே தற்கொலை, வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவது போன்ற மனநிலைதான் மாணவர்களிடம் மேலோங்கி நிற்கிறது. இந்த செல்போன் பயன்பாடு வீட்டிலும், வெளியே நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதும் என்று நின்றுவிடாமல் பள்ளிகளில் வகுப்பறையிலும் தொடர்வதுதான் இதைவிட கொடுமை. வகுப்பில் நடத்தும் பாடங்களையும் கவனிக்காமல் செல்போன்களில் கவனத்தை செலுத்துகின்றனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும், ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களும் சரி ஆசிரியர்களும் சரி செல்போன் பயன்பாடு இல்லாமல் இருக்கின்றனரா? என்பது கேள்விக்குறிதான்.

இதுபோன்ற கட்டுப்பாடற்ற செயல்களால் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடந்துள்ளது. கடந்த ஆண்டு காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் கிராமத்தில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பள்ளியில் படிக்கும் சிறுமியை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது கொலை செய்தான். இதுகுறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் மனித உரிமைகள் கழகத்துக்கு அனுப்பிய அறிக்கையில், ‘அந்த மாணவன் அடிக்கடி செல்போனில் ஆபாச படங்களை பார்த்ததால் அவனது மனநிலை மாறியுள்ளது. எனவே, தேவையான கவுன்சலிங் அளிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். மேலும் போலீசார் விசாரணையில், பள்ளி அருகில் உள்ள இணையதள மையத்தில் அதன் உரிமையாளர்தான் பள்ளி மாணவனுக்கு ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து கொடுத்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் வகுப்பில் ஆபாச படம் பார்த்த தனியார் பள்ளி மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மது குடிக்கும்போது அதை அவர்களே வீடியோ எடுத்து வெளியிட்டு சிக்கியது. இப்படி தினமும் செல்போன்கள் பயன்பாட்டால் மாணவ, மாணவிகள் சீரழிவது தொடர்கதையாகவே இருக்கிறது.

பெரும்பாலும் மாணவர்களுக்கு பெற்றோர் செல்போன்களை வாங்கி கொடுக்கிறார்களோ இல்லையோ அவர்களே பள்ளிக்கு செல்லாமல் எங்காவது வேலைக்கு சென்று செல்போன் வாங்கிய சம்பவங்களும் நடந்துள்ளது. இதுதவிர திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களிலும் மாணவர்கள் ஈடுபட வழிவகுத்துள்ளது இந்த செல்போன் மோகம். மாணவர்கள் அதிகப்படியான நேரம் பள்ளியில்தான் இருக்கின்றனர். எனவே, இதை ஆசிரியர்களே கண்காணிக்க வேண்டியுள்ளது. வகுப்பிற்கு செல்போன் கொண்டு வந்தால் அதை முறைப்படி பறிமுதல் செய்யவும் ஆசிரியர்களுக்கு அதிகாரம் உள்ளது. மேலும் கல்வி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தி எதிர்கால சமுதாயத்தை காப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

JACTO-JEO





posted from Bloggeroid

Ration card extension upto 31-12-2017


posted from Bloggeroid

Monday, December 26, 2016

துறைத்தேர்வுகளுக்காக தேவைப்படும் அனைத்து புத்தகங்கள்

Click below

http://www.ednnet.in/2014/05/department-exam-books.html?m=1

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி

💥TNPTF MANI💥

அரசு மேல்நிலைப்பள்ளிகளில்

1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அனுமதி

தமிழ்-476,
ஆங்கிலம்-154
கணிதம்-71
இயற்பியல்-119
வேதியியல்-125
வரலாறு-73
பொருளாதாரம்-166
வணிகவியல்-99

*நேரடி நியமனம் 50சதவீதமும்,50சதவீதம் பதவி உயர்வும் வழங்கப்படும்

*நேரடி நியமனத்துக்கு 800 இடங்கள் ஒதுக்கப்படலாம்

*ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்புக்கு
காத்துக்
கொண்டிருக்கின்றனர்

TNPTF-TNSF மாற்றுக் கல்விக்கான முகாம்





TNPTF விழுதுகள்

புதிய கல்விக் கொள்கையின் பாதிப்புகள் தொடர்பான நூல்களின் மீதான,

*மாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்*

26 & 27.12.2016

_ஊ.ஒ.பள்ளி, உப்பிலிபாளையம்_
_சென்னிமலை - ஈரோடு மாவட்டம்._

இன்றைய முதல் நாள் நிகழ்வில்,

மோசஸ் (TNPTF மாநிலத் தலைவர்)

பிரின்ஸ் கஜேந்திரபாபு
(பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை)

கார்த்திக்
(TNSF மாவட்டச் செயலாளர் - ஈரோடு)

உள்ளிட்டோர் வாசிப்பு முகாமை நடத்தினர்.

ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் TNPTF மாவட்டப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

posted from Bloggeroid

MATHS kit training for upper praimary trs



posted from Bloggeroid

Sunday, December 25, 2016

இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி?

அனைத்து பள்ளிகளிலும் இனி எட்டாம் வகுப்புக்குப் பதிலாக ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி' என்ற மனிதவள மேம்பாட்டுத்துறையின் பரிந்துரைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்டாயத் தேர்ச்சி முறையால் கல்வித் தரம் குறைவதாகவும். மாணவர்களுக்கு தோல்வி பயம் ஏற்படுவதில்லை என்பதால், அவர்களின் ஒழுக்கம் குறைகிறது என்கிறது மனிதவள மேம்பாட்டுத்துறை

த்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை

அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி முறையாக இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது . 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை மாற்ற மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்கல்

தங்கல் விமர்சனம்
-மணி

நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படம்.
ஓபனிங் சாங்கோ,பஞ்ச் டயலாக்கோ இல்லாமல் அமீர்கான் அறிமுகம்

சங்கர பாண்டி வாத்தியார் ங்கிறது பள்ளிகூட வாத்தியார் இல்ல,குஸ்தி சொல்லிக்குடுக்கிற குஸ்தி வாத்தியார் னு நினைக்க வைக்கும் அவர் உடல்வாகு.மல்யுத்தம் மீது இளமையிலிருந்து விளையாடி விருது பெறும் அமீர் வறுமை காரணமாக இலட்சியத்தை தியாகம் செய்கிறார்.ஒரு நிறுவனத்தில் மாத ஊதியத்தில் வேலை பார்க்கிறார்.பின் திருமணம்.
என் மகனை மல்யுத்த வீரனாக்குவேன் னு இலட்சிய வெறி குழந்தைக்கு கடத்த நினைக்கையில் பெண் குழந்தை பிறக்கிறது.

அடுத்த குழந்தை ஆணாக பிறக்க கிராமமே டிப்ஸ் தருகிறது.மீண்டும் பெண்.அடுத்தடுத்து பெண் என 4 பெண்கள்.
கிராமமே ஏளன பார்வை பார்க்கிறது.
வீட்டிலிருக்கிற மெடல்,இலட்சியமெல்லாம் ட்ரங்க் பெட்டியில் வச்சு பூட்டி விடுகிறார்.பெண் குழந்தை பார்க்கும்போதெல்லாம் கண்ணுல காசில்லாத ஏடிஎம்மை பார்ப்பது மாதிரி இருக்கிறது.

ஒரு முறை சக மாணவன் திட்டினான் என்பதற்காக கீதாவும்,பபிதாவும் புரட்டி எடுத்ததை பார்த்த அப்பா இருமகளையும் நீட் தேர்வுக்கு தயார் செய்யுற பிரைவேட் ஸ்கூல் மாதிரி ட்ரைன் அப் கொடுக்கிறார்.மனைவி எதிர்க்கிறாங்க.அவரிடம் அமீர் "ஒரு வருசம் மனசை கல்லாக்கிக்க,தோத்துட்டா வாழ்க்கை முழுசும் நான் மனசை கல்லாக்கிக்கிறேன்" சொல்றார்.
இடையில் அப்பா மீது கோபத்துடன் இருக்கும் பெண்கள் உறவுக்கார திருமணத்துக்கு சென்று டான்ஸ் ஆடுவதை அப்பா அங்கு வந்து அவர் அண்ணன் மகனை அடிக்கிறார்.

அந்த இரவு அதிக கோபம் மகள்களுக்கு அப்பா மீது.அப்போது திருமண பெண் உங்க அப்பா மாதிரி எனக்கு இல்லையேனு ஃபீல் பன்னுகிறார்.அப்போது அப்பாவின் தியாகம் புரிய ஆரம்பிச்சு சீரியசா பிராக்டீஸ் பண்ணுறாங்க.வர்தா புயலில் விழுந்த மரங்களை அப்புறபடுத்துவது மாதிரி

கைமேல் பலன் மாதிரி உள்ளூர் போட்டியில் கீதா ஆண்களுடன் மோதி வெற்றி பெறுகிறார்.ஊரே புது ஐநூறு ரூபாய்நோட்டை பார்த்த மாதிரி சந்தோசபடுறாங்க.இப்பிடியே தேசிய அளவில் தங்கம் வாங்குறாங்க கீதா.அப்பாவுக்கு அப்பவும் திருப்தி இல்ல.பெட்ரமாக்ஸ் லைட்டே வேணுங்கிற மாதிரி இந்தியா சார்பா விளையாடி தங்கம் வாங்கனும் னு சொல்றார்.

பாட்டியாலாவில் தேசிய விளையாட்டு பள்ளியில் சேர்த்து விடுறார்.அங்க பயிற்சியாளர் புது முறை சொல்கிறார்.அதில் ஒரு போட்டியில் கீதா தோற்றுவிடுகிறார்.மீண்டும் அப்பா அந்த ஊருக்கு வந்து பயிற்சி தருகிறார்.அப்பா டெக்னிக் பயன்படுத்தி இந்தியா சார்பாக தங்கம் வாங்கும்போதும், தங்கம் பெற்றவரின் நாட்டு தேசியகீதத்தை இசைக்கும்போது புல்லறிக்க வைக்கிறார் இயக்குநர்.

மனம் கவர்ந்தவை
*கதை அமீர்கானின் அண்ணன் மகன் சொல்கிறார்
*அனைத்து கதாபாத்திரங்களும் சம பங்கு

*ஒரு வருசம் மனசை கல்லாக்கிக்க,தோத்துட்டா வாழ்க்கை முழுசும் நான் மனசை கல்லாக்கிக்கிறேன்"

*இரண்டு பெண் பிறந்தால் ஆறுதல் சொல்பவரை அலட்சிய்ச்மாய் பார்த்து கடப்பது

*உள்நாட்டில் தங்கள்,வெளிநாட்டு வெள்ளி வாங்குனா மறந்திடுவாங்க.நீ தங்கம் வாங்கனும்.இந்தியாவுக்காக.

*மண்ணுக்கு நாம் கெளரவம் தரனும்.
அப்பதான் அது நமக்கு கவுரவம் தரும்

*அப்பாவா இருந்தா குரு வா இருக்க முடியல
குருவா இருந்தா அப்பாவா இருக்க முடியல

*ஆண் சமைச்சு பெண்ணுக்கு பரிமாற வைப்பார்

*யுத்தத்துல ஜெயிக்கிறதுக்கு முன்னாடி பயத்தை ஜெயிக்கணும்

*திட்டலுக்கு பதிலா இப்ப கைதட்டல்
கிராம மக்கள்

*யானைக்கு strength இருக்கலாம்
ஆனா சிறுத்தைக்கு Technical strength தெரியும்

இறுதியில் அமீர்கான் சொல்லும் சபாஷ் என்ற வார்த்தைக்கு கைதட்டலே சபாசுக்கு சம்மதம்

பெண்களை பெற்ற அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய படம்

Saturday, December 24, 2016

கிறிஸ்துமஸ் வரலாறு-பூ.கோ சரவணன்

xmas என்று கிறிஸ்துமஸ் விழாவை குறிக்கத்துவங்கி ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கிறிஸ்து + மாஸ் தான் கிறிஸ்துமஸ். கிரேக்கத்தில் x என்கிற எழுத்தே கிறிஸ்துவை குறிக்கும் அதைக்கொண்டு xmas என்று சுருக்கி அழைக்கிறார்கள் இன்றுவரை.

கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறப்பதற்கு முன்னரே வந்துவிட்டது ; பனிக்காலங்களில் பிறந்தநாளை கொண்டாட இந்த மரங்களை பயன்படுத்துகிற பழக்கம் இயேசு பிறப்பதற்கு முன்னமே இருந்துள்ளது.

லாட்வியா நாட்டில் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க துவங்கினார்கள் ; ஜெர்மனியின் மார்டின் லூதர் அதில் மெழுகுவர்த்தி ஏற்றினார். ஆல்பர்ட் என்கிற ஜெர்மானிய இளவரசரை மணந்து கொண்ட விக்டோரியா மகாராணி இங்கிலாந்துக்கு இந்த கிறிஸ்துமஸ் மரத்தை கொண்டு போக அங்கே இருந்து உலகம் முழுக்க பரவியது. இந்த மரத்தில் மின்விளக்குகள் வைக்கும் பழக்கத்தை கொண்டு வந்தது எடிசனின் உதவியாளர் எட்வர்ட் ஜான்சன். கிறிஸ்துமஸ் மரத்தை சாப்பிடலாம் ; அதன் முட்கள் வைட்டமின் சி நிறைந்தது.

கிறிஸ்துமஸ் உண்மையில் டிசம்பர் இருபத்தைந்து அன்று கொண்டாடப்பவில்லை மார்ச் 28,நவம்பர் 18 என்று மாறி மாறி கொண்டாடிக்கொண்டு இருந்தார்கள். போப் ஒன்றாம் ஜூலியஸ் தான் எல்லாரும் டிசம்பர் இருபத்தைந்து அன்று கொண்டாடும் பழக்கத்தை கொண்டு வந்தார் இது நடந்தது 350 A.D. !

கிறிஸ்துமஸ் தாத்தா செயின்ட் நிகோலஸ் துருக்கி நாட்டில் இருந்தவர் ; ஏழை எளியவர்களுக்கு உதவியவர். ஒரு முறை ஏழைப்பெண்கள் மூவருக்கு தங்க நாணயங்களை வீட்டு புகைப்போக்கி வழியாக அவர் போட.அதன் நினைவாக ஏழைகளுக்கு பரிசளிப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. ஜப்பானில் கிறிஸ்துமஸ் தாத்தா இல்லை ; பாட்டி தான். பாட்டிகள் தாத்தாவை விட அன்பானவர் என்கிறார்கள் இவர்கள்.

ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் அன்று பெரிய லாட்டரி போட்டி நடக்கும் ; ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரம் பிடுங்கும் போட்டிகள் உண்டு பல்கேரியாவில் மரத்தை அடுப்பெரிக்க கொண்டு வந்து கொண்டிருக்கும் பொழுது எல்லாரும் அதன் மீது சோளத்தை எறிந்து கொண்டாடுவார்கள். நார்வே நாட்டில் நம்மூர் மாட்டு பொங்கல் மாதிரியே பசுக்களை கவனிப்பார்கள். போலந்தில் இயேசுவுக்கு என்று ஒரு தனி மேஜை ; தனி சாப்பாடு.

நெதர்லாந்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு உதவியாளர் உண்டு ; பெயர் ப்ளாக் பெட்டி. குறும்பு செய்யும் பிள்ளைகளை மூட்டையில் பிடித்துப்போவது தான் இவரின் வேலை. நல்ல வேலை நாம எல்லாம் அங்கே பிறக்கலை.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாளுக்கு பாக்ஸிங் நாள் என்று பெயருண்டு. அன்றைய தினத்தில் இங்கிலாந்தில் வசூலிக்கப்பட்ட பணத்தை பாக்ஸ்களில் இருந்து பிரித்து கொடுப்பதை சர்ச்சுகள் வழக்கமாக வைத்திருந்தன என்பதால் இப்பெயர். அன்று நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் யார் வெல்வார் என்று பெரிய எதிர்பார்ப்பே இருக்கும்.

முதல் உலகப்போர் சமயத்தில் கிறிஸ்துமஸ் துவங்கதற்கு கொஞ்ச நாள் முன்னர் ஜெர்மனிய வீரர்கள் கரோல் பாடல்கள் பாடி இங்கிலாந்து வீரர்களை வாழ்த்தினார்கள். முதலில் போர் தந்திரமோ என்று எண்ணிய இங்கிலாந்து வீரர்கள் பின்னர் நம்பி கைகொடுக்க அமைதியாக கிறிஸ்துமஸ் விழாவை போர்க்காலத்தில் கொண்டாடினார்கள் இரு நாட்டு வீரர்களும்.

ஜிங்கில் பெல்ஸ் எனும் கிறிஸ்துமஸ் பாடல் உண்மையில் கிறிஸ்துமஸ் நிகழ்வுக்காக எழுதபட்டது இல்லை. அது நன்றி அறிவிக்கும் நாளுக்காக பியர்பான்ட் என்பவர் தன்னுடைய மாணவர்கள் பாடுவதற்காக எழுதினார் எல்லாருக்கும் பிடித்து போய் அது கிறிஸ்துமஸ் பாடலாகி விட்டது.

கிறிஸ்துமஸ் அன்று ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஸ்வீட். பிரான்ஸ் தேசத்தில் பூசணி கேக்,ஸ்வீடனில் ஆடு வடிவத்தில் இருக்கும் ஜிஞ்சர் பிஸ்கட்,இங்கிலாந்தில் உலர் பழங்களில் செய்யப்படும் புட்டிங் இப்படி நீளும் அந்த சுவையான பட்டியல்.

கிறிஸ்துமஸ் தீவு என்றொரு தீவுக்கு பெயர் - கிறிஸ்துமஸ் தினத்தன்று 1643-இல் வில்லியம் மைனர்ஸ் எனும் மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த தீவுக்கு இப்படி ஒரு பெயர்.

நியூட்டன்,ஜின்னா,வாஜ்பாய்,மதன் மோகன் மாளவியா,இசைக்கலைஞர் நௌஷாத் அலி எல்லாரும் இதே தினத்தில் பிறந்தவர்கள்..!

- பூ.கொ.சரவணன்

நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் விவரம் - 2017 ஆம் ஆண்டு 


posted from Bloggeroid

10ம் வகுப்பில் தோல்வி அடைந்த தனித் தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித் தேர்வர்கள் மீண்டும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் 2017 மார்ச் மாதம் நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால் 26ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நேரடித் தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1ல் மொழிப்பாடத்தில் தமிழ் மொழிப்பாடத்தை மட்டுமே முதல் மொழிப்பாடமாக எழுத முடியும். மேலும் பதினான்கரை வயது பூர்த்தி அடைந்தவர்கள், பல்வேறு திட்டங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தகுதி உடையவர்கள். மேலும், எஸ்எஸ்எல்சி பழைய பாடத்திட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள் தோல்வி அடைந்த பாடங்களில் மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஓஎஸ்எல்சி பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர மற்ற பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் அந்த பாடங்களை எழுதலாம்.

மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பழைய பாடத்திட்டத்தில் ஓரிரு பாடங்களில்கூட தோல்வி அடைந்து இருந்தாலும் அவர்கள் புதிய பாடத்திட்டத்தில் ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். சேவை மையங்கள் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க முடியாத வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தனித் தேர்வர்கள் மார்ச் 2017 பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால் குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் மூலம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநரை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் படித்து தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்புவோர் Migration Certificate, Evaluation Certificate பெற்று அரசுத் தேர்வு சேவை மையங்களில் கொடுத்து விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் ெதரிந்து கொள்ளலாம்.