இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909
Showing posts with label TNPTF NEWS. Show all posts
Showing posts with label TNPTF NEWS. Show all posts

Wednesday, November 08, 2017

TNPTF NEWS

*JACTTO-GEO வழக்கு நிலவரம் : TNPTF பொதுச் செயலாளர் அறிக்கை - 08.11.17*

*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!*

*வணக்கம்.*

*ஜாக்டோ-ஜியோ போராட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகத் தனிநபர் தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது தாங்கள் அறிந்ததே.*

*இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் திரு.N.G.R பிரசாத் அவர்கள் தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தார்.*

*இவ்வழக்கு விசாரணை தொடர்பான நிர்வாகச் சிக்கல் காரணமாக, உயர்நீதி மன்ற மதுரைக்கிளை நீதியரசர்களால் காணொளிக் காட்சி வாயிலாக இங்கிருந்தே வழக்கை நடத்திட சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்தது.*

*ஆனால், இம்முறையிலான விசாரணை எவ்வகையிலும் தொய்வை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற காரணத்தால், சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்த முறையை நமது மூத்த வழக்கறிஞர் அவர்கள் ஏற்கவில்லை.*

*அதனால், தற்பொழுது மீண்டும் உயர்நீதி மன்ற மதுரைக்கிளைக்கே வழக்கை மாற்றி, மதுரைக் கிளையில் விரைந்து விசாரணைக்குக் கொண்டு வருவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.*

*எனவே, இன்னும் ஓரிரு தினங்களில் ஜாக்டோ-ஜியோ வழக்கு உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது என்ற தகவலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்பது நீதிமன்ற மாண்பினை முழுமையாக மதிக்கும் அதே வேளையில், களப் போராட்டத்தின் வாயிலாக நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும் முனைப்போடு தொடர்ந்து செயல்பட்டு வரும் அமைப்பு என்பது நமது இயக்கத் தோழர்கள் அனைவரும் அறிந்ததே.*

*தனிநபர் தொடுத்த வழக்கின் தலையீட்டாலேயே தற்போதைய நமது களப்போராட்ட வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.*

*நீதிமன்ற மாண்பினை மதிக்கும் நாம் அதன் தீர்ப்பிற்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதால், நமது மூத்த வழக்கறிஞர் அவர்களின் முயற்சிகளுக்கும் மதிப்பளித்து தோழர்கள் அனைவரும் சற்று பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.*

*இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சினையை முழுமையாகக் கலைந்திடும் போராட்ட வியூகத்தை வடிவமைக்க மாநில அமைப்பிற்கு, திண்டுக்கல் மாநிலச் செயற்குழு வழங்கியுள்ள அதிகாரத்தின் மீது தோழர்கள் அனைவரும் கொண்டுள்ள நம்பிக்கையை மாநில மையம் முழுமையாக உணர்ந்தே செயல்பட்டு வருகிறது.*

*தற்போதைய கள ஓய்வை ஆக்கப்பூர்வ அடுத்த கட்ட நகர்விற்கான தயாரிப்புக் காலமாகத் தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.*

*ஊதியம் & ஓய்வூதிய உரிமைகளை முழுமையாக மீட்டெடுக்கும் வரை நமது அமைப்பு தொடர்ந்து போராடும்.*

*தோழமையுடன்,*
*செ.பாலசந்தர்,*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Monday, December 26, 2016

TNPTF-TNSF மாற்றுக் கல்விக்கான முகாம்





TNPTF விழுதுகள்

புதிய கல்விக் கொள்கையின் பாதிப்புகள் தொடர்பான நூல்களின் மீதான,

*மாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்*

26 & 27.12.2016

_ஊ.ஒ.பள்ளி, உப்பிலிபாளையம்_
_சென்னிமலை - ஈரோடு மாவட்டம்._

இன்றைய முதல் நாள் நிகழ்வில்,

மோசஸ் (TNPTF மாநிலத் தலைவர்)

பிரின்ஸ் கஜேந்திரபாபு
(பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை)

கார்த்திக்
(TNSF மாவட்டச் செயலாளர் - ஈரோடு)

உள்ளிட்டோர் வாசிப்பு முகாமை நடத்தினர்.

ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் TNPTF மாவட்டப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

posted from Bloggeroid