இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, February 15, 2016

தேர்வு துறை திட்டம் தேர்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா


தனியார் பள்ளி தேர்வு அறைகளில், ஆசிரியர் உதவியுடன் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்த, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது; அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தமிழகத்தில், மார்ச், 4 முதல், பிளஸ் 2; மார்ச், 15 முதல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன; 15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஆயத்த பணிகளில் தேர்வுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில், குறுக்கு வழியில் மாநில, 'ரேங்க்' பிடிக்க நினைக்கும் சில தனியார் பள்ளிகளுக்கு, 'செக்' வைக்க, தேர்வு அறைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, சந்தேகத்துக்கு இடமான தனியார் பள்ளிகள் பட்டியல் தயாராகி வருகிறது. இதுகுறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: சில ஆண்டுகளாக, கொங்கு மண்டலத்தில் உள்ள, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகள்; மதுரை மாவட்டத்தில் உள்ள சில குறிப்பிட்ட பள்ளிகள் மட்டும், மாநில, 'ரேங்க்' எடுக்கின்றன. கடந்த ஆண்டு, பிளஸ் 2 கணிதத் தேர்வின் போது, தனியார் பள்ளி தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் ஆள் மாறாட்டம் செய்ததும்; கேள்வித்தாளை, 'வாட்ஸ் ஆப்' மூலம், பிற ஆசிரியர்களுக்கு அனுப்பியதும் தெரிய வந்தது. இந்த பிரச்னை, பொதுத் தேர்வில் விஸ்வரூபம் எடுத்தது; இது குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே, இந்த ஆண்டு, தேர்வு மையங்களுக்கு, தேர்வு கண்காணிப்பாளர்கள் மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்பட உள்ளது.

மேலும், தேர்வு அறையில், கண்காணிப்பு கேமரா பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளி தேர்வு மையங்களில் அதிகாரிகள், ஆசிரியர்கள் உதவியுடன் முறைகேடு நடப்பது இதன் மூலம் தடுக்கப்படும். இவ்வாறு தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறின. அதிகாரிகள், அரசியல்வாதிகள் உடந்தை சில குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் மாநில, 'ரேங்க்' பிடிக்கின்றன. மேலும், அரசு பள்ளிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, சில தனியார் பள்ளிகள் முன்னிலை பெறுகின்றன. இதற்கு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் உடந்தையாக உள்ளனர். அதனால் தான், கண்காணிப்பு கேமரா பொருத்துதல்; மொபைல் போனுக்கு கட்டுப்பாடு போன்ற திட்டங்களை, தேர்வுத் துறையால் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியவில்லை என, கூறப்படுகிறத

Tamil Nadu Open University B.Ed.,B.Ed(SE) Term End Examination Revaluation 2016 Results Published

Click below

http://www.tnou.ac.in/bedrev2016.htm

Sunday, February 14, 2016

அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம் அடைகிறது : தமிழகம் ஸ்தம்பிக்கும் அபாயம்-தினகரன்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தங்கள் போராட்டத்தை இன்று முதல் தீவிரமாக நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால், பல்வேறு துறைகள் முற்றிலும் முடங்குவதுடன், ரேஷனில் அரிசி, சர்க்கரை மற்றும் வருவாய் துறையில் சான்றிதழ், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது உள்பட அனைத்து பணிகளும் கடுமையாக பாதிக்கும். தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. பதவியேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ளது.

ஆனால், இதுவரை ஒருமுறை கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என எந்த சங்கங்களையும் ஜெயலலிதா நேரில் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

திணறும்அமைச்சர்கள்: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10.63 லட்சம் வாக்குகள் மற்றும் அவர்களது குடும்ப வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போய் விடும் என்ற அச்சத்தில், கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தும் சங்கங்களுடன் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் மற்றும் தலைமை செயலாளர் ஞானதேசிகன் அடங்கிய குழுவினர் பேசி வருகிறார்கள். குறிப்பாக பேச்சுவார்த்தையின் முடிவில் ‘உங்கள் கோரிக்கைகள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்’ என்று தெரிவித்து வருகின்றனர். இது போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் நடவடிக்கையாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

பேச்சுவார்த்தையில் உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்ைல. இதனால் இன்று முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு ஊழியர்களின் திட்டமிட்டுள்ளனர்.போராட்டம் தீவிரமாகும்: அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது: ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு இதுவரை அக்கறை காட்டவில்லை. சமீபத்தில் அமைச்சர்கள் எங்களை அழைத்து பேசும்போது, ‘’உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரிடம் தெரிவிப்பதாகவும், அவர் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என்றும்’’ ஆசை வார்த்தை காட்டினர். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் அடுத்தக்கட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். எங்கள் போராட்டத்துக்கு ஆசிரியர்கள், நர்சுகள், நீதித்துறை ஊழியர்கள், டாக்டர்கள் என பல்வேறு துறையினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக இன்று காலை அனைத்து மாவட்டங்களிலும் மறியல் நடத்தப்படும். சென்னையை பொறுத்தவரை போலீசார் எங்களை போராடவிடாமல் தடுக்கின்றனர். அரசு தரப்பில் மிரட்டலும் வருகிறது. இருப்பினும் எந்த தடை வந்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்றார். எதிர்கட்சிகள் புகார்: அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை ஒன்றிணைந்து இன்று முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசு பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் ேபாராட்டத்தில் ஈடுபடுவதால் தொடக்கப்பள்ளிகள் நாளை இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஊழியர்களின் போராட்டம் தீவிரமடையும் இந்த நிலையிலும், எதை பற்றியும் கவலைப்படாமல் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் கூறியுள்ளன. அரிசி, சர்க்கரை, பருப்பு கிடைக்காது: சிவில் சப்ளை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழஙக வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழக அரசின் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச்சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் ஊழியர்களும் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இச்சங்கங்களின் கீழ் 15,443 ரேஷன் கடைகளில் சுமார் 12 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதுதவிர பிற சங்கங்களை சேர்ந்த ரேஷன் ஊழியர்கள் உள்பட மொத்தம் சுமார் 30 ஆயிரம் ேரஷன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட் புறக்கணிப்பு: தமிழகத்தில் உள்ள பிற துறைகளைப் போலவே நீதித் துறை ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு மீது உள்ள எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நீதித்துறை ஊழியர்கள் இன்று கோர்ட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்த அரசு துறை ஊழியர்களும் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளதால் இன்று முதல் தமிழகம் ஸ்தம்பித்து, அரசு நிர்வாகமே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Aadhar card camp and incharge name list in tirupur dist

Click below

https://app.box.com/s/ty90nvbyqahyzbu713ffcxaq7439v93w

Saturday, February 13, 2016

அரசு ஊழியர்கள் போராட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு


தமிழகத்தில் நாளை (பிப்.,15) நடக்கும் அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது,'' என, மாநில தலைவர் பேட்ரிக் ரேமன்ட் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது:

தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தொடக்கக் கல்வி துறையில் நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளித்தல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. பிப்.,௧௬ல் பட்ஜெட் தாக்கலாகும் வரை காத்திருப்போம். கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம், என்றார். நிர்வாகிகள் வீரசிம்மன், ஜெயக்குமார், கிருபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தீவிரமடையும் போராட்டங்கள்


சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைவதால், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளதால் அரசின் பதவிக்காலம் முடிவதற்குள், எப்படியாவது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கில், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம் மற்றும் ஆறாவது ஊதிய கமிஷனின் பல்வேறு குளறுபடிகள்தான், அரசு ஊழியர்களிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காலமுறை ஊதியம், முழு நேர ஊழியர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் ஸ்டிரைக்கால் கிராமப்புறங்களில் நுாறு நாள் வேலை திட்டம் தடைபட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் குறைகள் தீர்க்கப்படும். புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

ஆனால், ஆட்சி அமைத்து ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை எந்த அரசு ஊழியர் சங்கங்களையும், முதல்வர் அழைத்து பேசவில்லை. இதே போல், புதிய ஓய்வு ஊதிய திட்டத்தில் பிடித்தம் செய்த ரூ.8 ஆயிரத்து 500 கோடி குறித்து அரசு எந்த வித பதிலையும் தெரிவிக்கவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: ஆதரவற்றோருக்கு வழங்க கூடிய மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரம் ரூபாய். அந்தளவிற்கு கூட அரசு ஊழியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு இதுநாள் வரை பணபலன்கள் வழங்கப்படவில்லை. எனவே 20 அம்ச கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டங்கள் தொடரும், என்றார். ரேஷன் ஊழியர்களும் போராட்டம்தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் கீழ் 23 ஆயிரம் ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இதில் 45 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

'பணி நிறைவு பெறுவோருக்கு ஓய்வூதியம், கருணைத் தொகை வழங்க வேண்டும்' என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். நாளை முதல் போராட்டத்தில் இவர்களும் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''மொத்தம் 4,534 தொடக்க வேளாண் கூட்டுறவு ஊழியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்,'' என்றார்.

Friday, February 12, 2016

படிப்பைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் கடும் நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை


அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அளிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் எச்சரித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 13 பேருக்கு மாற்றுச் சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு தேர்வு நெருங்கும் நேரத்தில் சரியாக படிக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி மாற்றுச் சான்றிதழ் (டி.சி) அளித்து பள்ளியை விட்டு வெளியில் அனுப்பும் நிகழ்வுகள் ஒரு சில மாவட்டங்களில் ஏற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு அனுப்பப்படும் மாணவர்களின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று தெரிந்திருந்தும், இவ்வாறு செய்வது தவறாகும். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், குறைந்தபட்ச மதிப்பெண் பெறவும் கற்றல் உபகரணங்கள், குறுந்தகடுகள், கையேடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன.

குறைந்த கற்றல் திறனுடைய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது, கையேடுகள், உபகரணங்கள் மூலம் அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் தேர்வு அச்சத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுக்கு ஏற்கனவே கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதில் கொண்டு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை முழுவதுமாக நம்பி பள்ளிக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

தமிழக அரசும் மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கியுள்ள இந்தத் தருணத்தில் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதுபோன்று நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுமாயின் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஏமாற்றம் அறிவிப்போடு நிற்கும் இலவச திட்டங்கள்


பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகளும், சட்டசபை தேர்தலும் நெருங்கி விட்டன. ஆனால், மாணவர்களுக்கான இலவச திட்டங்கள், முழுமையாக வந்து சேரவில்லை என, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:

பள்ளி மாணவர்களுக்கு, பல வகையான இலவச திட்டங்கள், அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. அடுத்த மாதம் பொதுத்தேர்வும், அதன்பின், மற்ற வகுப்புகளுக்கான தேர்வும் துவங்க உள்ளன. ஆனால், பல இலவச பொருட்கள், இன்னும் மாணவர்களுக்கு வந்து சேரவில்லை. பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, சைக்கிள், லேப் - டாப் போன்றவை மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. மற்ற பொருட்கள், சில வகுப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன; பெரும்பாலானவருக்கு வழங்கப்படவில்லை. அரசின் அறிவிப்புகள் அறிவிப்புகளாகவே உள்ளன.

அதிகாரிகளும், இதை கண்டு கொள்வதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். மாணவர்களுக்கு இன்னும் கிடைக்காத இலவசங்கள் * மாணவர்களுக்கு வழங்கப்படும் காலணிகள், சில மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளில் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன * கணித உபகரணப் பெட்டியான, 'ஜியோமெட்ரிக் பாக்ஸ்' 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது * கிரயான் வண்ண பென்சில்கள், உலக வரைபடப் புத்தகமான, 'அட்லஸ்' ஆகியவை, பெரும்பாலான பள்ளிகளில் வழங்கப்படவில்லை * தலித், சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, பல மாவட்டங்களில் கிடைக்கவில்லை * எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், 12 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக, இந்த உதவித்தொகையை பற்றி எந்த தகவலும் இல்லை.

IGNOU B.ed december 2015 result published

Click below

https://studentservices.ignou.ac.in/TE_Result/TermEndDec15/TermEndDec15.asp

Thursday, February 11, 2016

2016-17 ஆம் கல்வி ஆண்டுக்கான தனியார் பள்ளிகளின் கட்டணம் விவரம்: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டண விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.inmiscellaneousFee20152018.html) வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அதிக அளவு கட்டணங்கள் வசூலிப்பதை முறைப்படுத்தவும், தகுந்த கட்டணங்களை நிர்ணயிக்கவும் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவானது, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்துள்ள கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டண விவரங்கள் மாவட்ட வாரியாக தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வரும் கல்வியாண்டுக்கான (2016-17) மாணவர் சேர்க்கை பல தனியார் பள்ளிகளில் தொடங்கியுள்ள சூழலில், கட்டண நிர்ணய விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு


தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரை www.tndge.in என்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம்.

தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் 'ஆன்லைன்' விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50 ஐ சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச்சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

விரைவில் ஆன்லைனில் பி.எப்., பணம் பெறும் வசதி


தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எ.ப்.ஓ.,), ஆரக்கிள் ஓ.எஸ்., மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டர்களை செகந்திராபாத், கர்கூன், துவாரகா ஆகிய இடங்களில் அமைக்கவுள்ளது.

இந்த டேட்டா சென்டர்களுடன் நாடு முழுவதிலுமுள்ள 123 இ.பி.எப்.ஓ., அலுவலகங்களும் இணைக்கப்படும். இப்பணி ஜூன் மாதத்தில் நிறைவாகும். இதனையடுத்து ஆகஸ்டு மாதம் முதல், பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் புதிய வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இப்புதிய வசதியில், சந்தாதாரர்களின் பி.எப். கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு எண், ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் யூ.ஏ.என். நம்பரை குறிப்பிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் பி.எப்., பணம் நேரடியாக வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்படும். இப்புதிய வசதியால் சந்தாதாரர்கள் சில மணிநேரங்களிலேயே பி.எப்., பணத்தை திரும்ப பெற முடியும்.

Drop out students form

Click below

https://app.box.com/s/57gieh6im9c8gyb57ddzh9c5phj1humy

Wednesday, February 10, 2016

TNPTF 6வது மாநில மாநாட்டு தீர்மானங்கள்

Click below

https://app.box.com/s/ulmf599hw8epuhwu8fnewof84dpho642

ஆசிரியர் சங்கத்தினரை சமாதானப்படுத்திய அமைச்சர்கள் குழு


ஓராண்டாக, தொடர் போராட்டம் நடத்திய, 'ஜாக்டோ' ஆசிரியர் சங்கத்துடன், அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், சங்கத்தினர் சமாதானப்படுத்தப்பட்டு உள்ளனர்.ஆசிரியர்களின், ௧௫ அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலைநிறுத்தம் மற்றும் மறியல் என, ஐந்து கட்ட போராட்டங்களை, ஜாக்டோ சங்கம் நடத்தியது. அடுத்த போராட்டம் குறித்து முடிவு செய்ய, பிப்., ௧௩ல் திருச்சியில் உயர்மட்டக் குழுவைக் கூட்ட திட்டமிட்டிருந்தது.

ஆனால், சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன், ஆசிரியர்களை சமாதானப்படுத்த, நேற்று முன்தினம் அரசு தரப்பு பேச்சு நடத்தியது. இந்தப் பேச்சில், போராட்டம் நடத்தும், 'ஜாக்டோ' சங்கம் - புதிதாக உருவாகி உள்ள, 'ஜாக்டா' ஆசிரியர் சங்கம் - அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட, 'டேக்டோ' ஆசிரியர் சங்கம் போன்றவை பங்கேற்றன.அப்போது, சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு, அமைச்சர்கள் சமாதான பதில் அளித்துள்ளனர். இறுதியில், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ''அனைத்து கோரிக்கைகளும் செயலர் மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு, முதல்வரின் அனுமதியுடன், பிப்., ௧௬ல், சட்டசபையில், பட்ஜெட் உரையின் போது அறிவிப்பாக வெளியிட முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என தெரிவித்துள்ளார்.

மேலும், பேச்சின் போது, 'பிப்., ௧ல் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, தற்செயல் விடுப்பாகக் கருதி, சம்பள பிடித்தமின்றி, மாத ஊதியம் தர வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு, அதிகாரிகள் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tuesday, February 09, 2016

வேலைநிறுத்தத்தில் பங்கேற்பில்லை: அரசு அலுவலர் ஒன்றியம் உள்பட 5 சங்கங்கள் அறிவிப்பு


சில அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உள்பட 5 சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், எடப்பாடி கே.பழனிச்சாமி, பி.பழனியப்பன், தலைமை செயலர் கே.ஞானதேசிகன், நிதித்துறை செயலர் சண்முகம், பணியாளர் சீர்திருத்தத் துறைச் செயலர் டேவிதார், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட 5 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஒன்றரை மணி வரை நீடித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் சண்முகராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ 1.50 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 35 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 8-ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த நிலையில், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அதற்கான அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் மூத்த அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

இதையடுத்து, சில அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்திருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றார்